தேசிய விருது பெற்ற தென்காசி அரசு பள்ளி ஆசிரியை சொல்லித்தரும் பாடம் இதுதான்..!

தேசிய விருது பெற்ற தென்காசி அரசு பள்ளி ஆசிரியை சொல்லித்தரும் பாடம் இதுதான்..!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மாலதி இந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற தேர்வு பெற்றுள்ளார்.

நம்மில் பலருக்கு chemistry subject நாளே ஈகுவேஷன்ஸ், ஃபார்முலா, பீரியாடிக் டேபிள் அப்படினு எல்லாத்தையும் மனப்பாடம் பண்றதுக்குள்ள போதும் போதும் என்று ஆகிவிடும். ஆனால் இந்த கஷ்டமான கெமிஸ்ட்ரி பாடங்களையே mobile quiz games, puppet show, வில்லுப்பாட்டு மாதிரி சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு ஈசியா புரியும்.

இப்படி தன்னோட மாணவர்களுக்கு எளிமையான முறையில் வாழ்வியலோடு இணைந்து அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் தான் வி.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் மாலதி டீச்சர். இவருக்கு தான் இந்தாண்டு குடியரசுத் தலைவரோட தேசிய நல்லாசிரியர் விருது கிடைச்சுருக்கு.

மாலதி டீச்சர் தேசிய நல்லாசிரியர் விருது மட்டுமல்லாமல் தமிழக அரசு ராதாகிருஷ்ணன் விருது, 26 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைன் கிளாஸ் எடுத்து வேர்ல்ட் ரெக்கார்டு என பல விருதுகள் வாங்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் தன்னோட பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் தன்னோட முயற்சியால world record வாங்க வச்சிருக்காங்க.

14 ஆண்டுகள் அனுபவத்துல திருப்பூர் தென்காசி இன்னும் பல இடத்தில பணியாற்றி இருக்கிறாங்க. இப்போ வீரகேரளம்புத்தூர்ல இருக்குற அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ஆக பணியாற்றி வருகிறார்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கணும்னா நம்மளை நம்மளே அப்டேட் பண்ணிக்கணும் அப்படின்னு physcology, app development, robotics ண்ணு பல விஷயங்களை படிச்சு தன்னை தானே அப்டேட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. Puppet, ரோபோடிக்ஸ்ன்னு மாலதி டீச்சர் கிளாஸ்ல குழந்தைங்க அவ்வளவு ஆர்வத்தோட வேதியல் பாடத்தை கத்துக்கிட்டு இருக்காங்க.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...