அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிப்பதில் சிக்கல்: தற்காலிக ஊழியர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் இல்லை...!

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரிப்பதில் சிக்கல்: தற்காலிக ஊழியர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் இல்லை...!

அரசு பள்ளி தற்காலிக சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் வழங்காததால் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம், சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் வாங்க மாதந்தோறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.1,300, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை.

இதனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கி வருகின்றனர். சில பள்ளிகளில் ஊதியம் கிடைக்காததால் சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

சுகாதாரமின்றி கழிப்பறைகள்: சில பள்ளிகளில் சுத்தப்படுத்தாமல் கழிப்பறைகள் சுகா தாரமின்றி காணப்படுகின்றன. இதனால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: கழிப்பறை சுகாதாரப் பணிகளுக்கு ஏற்கெனவே அரசு ஒதுக்கும் நிதி குறைவாக உள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் கூடுதல் செலவை ஆசிரியர்களே ஏற்கின்றனர்.

நிரந்தர பணியாளர்களை...: தற்போது ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிதியையும் வழங்கவில்லை. இதனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், சுகாதாரப் பணிகளுக்கான பொருட்களை வாங்கவும் முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களை பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும்.

அதுவரை ஊராட்சிகளில் உள்ள சுகாதார பணியாளர்களை மாற்றுப் பணி மூலம் பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Share:

தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு...!

 தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு...!


வழங்கப்படும் படிப்புகள்:

பி.ஏ.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) - 5 ஆண்டுகள்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுபிஎச்.டி.,

தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பிஎச்.டி., படிப்பில் சேர எல்.எல்.எம்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.

தேர்வு முறை: அனைத்து படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஏ.ஐ.எல்.இ.டி., எனும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. சென்னை, மதுரை, பெங்களூரு, கொச்சி, மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13

விபரங்களுக்கு: https://nludelhi.ac.in/


Share:

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை....!

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை....!


G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்...

Download here

Share:

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்..!

 தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்..!

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் இயங்கும்,

  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன், ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அக்., 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம்.

Share:

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு....!

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு....!

 

கடந்த மாதம் நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 

இதன் முடிவுகள் வரும் 29ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். பதிவு எண் மறும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share:

இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு...!

 இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு...!

தனிநபர்கள் முதல் சர்வதேச அளவிலான மிகப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக தங்களுடைய பொருட்கள் அல்லது சேவையை விளம்பரப்படுத்துவதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் இணைய வழி சந்தைப்படுத்துதல்.

முக்கியத்துவம்

சர்ச் இன்ஜின்கள், இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் மொபைல் போன்கள் ஆகிய பல்வேறு பரிமாணங்கள் வாயிலாகவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் எளிய முறையாகவும், கட்டணம் குறைவாகவும் உள்ளதால், இதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் பயனாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இத்துறையின் சந்தை அளவு 2015ல், இந்தியாவில் 47 பில்லியனாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் 199 பில்லியனை எட்டியது. 2024ம் ஆண்டில் 539 பில்லியன் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 2030ம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச படிப்பு

குறுகியகால இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை கூகுள் உட்பட பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. இணையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுத்தும் வழிமுறைகள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பின் வாயிலாக டிஜிட்டல் உலகில் சந்தைப்படுத்துதலின் அடிப்படை திறன்களை கற்றுக்கொள்ளலாம்.

பாடத்திட்டங்கள்

சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் - எஸ்.இ.ஓ., கன்டன்ட், மற்றும் யு-டியூப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூகுள் நிறுவனம் சான்றிதழை வழங்குகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் உத்திகளை உருவாக்குதல், சர்ச் இன்ஜின்கள், கன்டன்ட் மார்க்கெட்டிங் மற்றும் மின்னஞ்சல் போன்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் ஈடுபடுத்துதல், சந்தைப்படுத்தல் பகுப்பாய்வுகளை அளவிடுதல் மற்றும் ஷேரிங் இன்சைட்ஸ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

கூகுள் டிஜிட்டல் கேரேஜ், ஆட்-வேர்ட்ஸ், ஆட்ஸ் சர்ச் அட்வர்டைசிங், சர்ச் நெட்வர்க், ஆட்ஸ் டிஸ்பிளே அட்வர்டைசிங், மொபைல் அட்வர்டைசிங், வீடியோ புரமோஷனல் ஆட்ஸ், ஆட்வேர்ட்ஸ் கீவேர்ட் பிளானர் மற்றும் மை பிசினஸ் ஆகியவை குறித்து அறிந்துகொள்ளவும் இப்படிப்பு உதவுகிறது.

பயன்கள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக, பல்வேறு ஆன்லைன் சேனல்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பொருட்களை வாங்க ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை வளர்க்கவும் முடிகிறது. ஆன்லைன் ஸ்டோர்களை வடிவமைத்தல், தயாரிப்பு பட்டியலை உருவாக்குதல், சந்தை ஆராய்ச்சி நடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவையும் இதில் சாத்தியம்.


Share:

பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு...!

 பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு...!

புதுச்சேரி பல்கலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆபரேட்டர்- 5, டிரைவர்- 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் -49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன.சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

 இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வருகிற 7-ம் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Share:

மத்திய அரசில் Hindi Translator காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசில் Hindi Translator காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆனது Hindi Translator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Hindi Translator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindi Translator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Hindi Translator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ICMR-ன் நிபந்தனைகளின் படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Share:

1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் தேதி (9-10-2023) அறிவிப்பு...!

 1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளி திறக்கும் தேதி (9-10-2023) அறிவிப்பு...!

1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு.

* 6-8 reopen on 03.10.2023

* 1-5 school reopen on 09.10.2023

Share:

NTPC EET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!

NTPC EET வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் ஆனது 2024 ஆம் ஆண்டுக்கான Engineering Executive Trainee(EET) அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழே காண்போம்.

NTPC EET வேலைவாய்ப்பு:

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் மற்றும் மைனிங் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர் பொறியியல்/தொழில்நுட்பத்தில் 65% மதிப்பெண்களுக்கு குறையாத முழுநேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் GATE 2024 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்

NTPC EET ஆட்சேர்ப்பு 2024 இல், பொது/EWSக்கான வயது வரம்பு விண்ணப்பத்தின் கடைசி தேதியின்படி 27 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/OBC/PWBD/XSM விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு GOI விதிகளின்படி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிக்கு என ரூ. 40,000/- முதல் ரூ. 1,40,000/- வரை சம்பள வழங்கப்பட உள்ளது. NTPC EET அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் https://careers.ntpc.co.in/ தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியகாந் பின் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Short Notification 2023 Pdf

Share:

1 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு!

1 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு.


What's your opinion Comment Below

உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்

* 6-8 reopen on 03.10.2023

9 - 12 Reopen on 03-10-2023

* 1-5 school reopen on 09.10.2023

Term 1 leave and term 2 reopen Proceedings 👇

Download  PDF file - Click Here

Share:

எண்ணும் எழுத்தும் -2023-24 வகுப்பு 1,2 & 3 - இரண்டாம் பருவம் பயிற்சி கால அட்டவணை

எண்ணும் எழுத்தும் -2023-24 வகுப்பு 1,2 & 3 - இரண்டாம் பருவம் பயிற்சி கால அட்டவணை - ( 03.10.2023 , 04.10.2023 ) 

Ennum Ezhuthum - 2nd Term New Training Schedule



Share:

8th Standard - Quarterly Exam Question Paper 2023

8th Standard - Quarterly Exam Question Paper 2023 - PDF Download All subjects


8th Quarterly Exam Question 2023 - 2024
Tamil Download
English Download
Maths Download
Science Download
Social science Download

8th Standard - Quarterly Exam Question Paper 2023

Tamil

8th Tamil - Quarterly Exam 2023 | Original Question paper - PDF Download here

8th Tamil - Quarterly Exam 2023 | Model Question paper - PDF Download here

8th Tamil - Quarterly Exam important Questions 2023 - PDF Download here

English

8th English - Quarterly Exam 2023 | Original Question paper - PDF Download here

8th English - Quarterly Exam 2023 | Model Question paper -PDF Download here

Maths

8th Maths - Quarterly Exam 2023 | Original Question paper - Tamil Medium Download here

8th Maths - Quarterly Exam 2023 | Original Question paper - English Medium Download here

8th Maths - Quarterly Exam 2023 | Model Question paper - Tamil Medium Download here

8th Maths - Quarterly Exam 2023 | Model Question paper - English Medium Download here

Science

8th science - Quarterly Exam 2023 | Original Question paper - Tamil Medium Download here

8th science - Quarterly Exam 2023 | Original Question paper - English Medium Download here

8th science - Quarterly Exam 2023 | Model Question paper - Tamil Medium Download here

8th science - Quarterly Exam 2023 | Model Question paper - English Medium Download here

Social science

8th social science - Quarterly Exam 2023 | Original Question paper - Tamil Medium Download here

8th social science - Quarterly Exam 2023 | Original Question paper - English Medium Download here

8th Social science - Quarterly Exam 2023 | Model Question paper - Tamil Medium Download here

8th Social science - Quarterly Exam 2023 | Model Question paper - English Medium Download here

Tags : 8th first term Question 2023, 8th 1st Term Question September 2023,8th Quarterly Exam Question Paper 2023

Share:

மகளிர் உரிமை தொகை ஏன் கிடைக்கவில்லை? உதவி மையங்கள் மூலம் அறிய ஏற்பாடு.!!!

மகளிர் உரிமை தொகை ஏன் கிடைக்கவில்லை? உதவி மையங்கள் மூலம் அறிய ஏற்பாடு.!!!

ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதற்கான காரணங் களை அறியும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவ லகம், ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக அலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரங்களை அறியலாம்.

மேலும் ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிகப்பட்டவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்றவர்கள் டெபிட் கார்டு மட்டுமின்றி ரூபே கார்டு மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றிருந்தாலும், அரசு வரவு செய்த உரிமைத்தொகையில் பணம் எடுக்கக்கூடாது.

பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படாது என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்து உள்ளார்.



Share:

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் புதிய தகுதித்தேர்வு!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் புதிய தகுதித்தேர்வு!!!

முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:கல்லூரிக் கல்வி இயக்குனர் கலை, மனிதவளம் மற்றும் சமூக கல்வியில் படிக்கும் 100 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவில் 100 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் வழங்க கேட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


அதன்படி, முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் 60 மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மேலும் ஆராய்ச்சி தற்காலிக உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். இதுதவிர மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.அந்த வகையில் இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. 


இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தகுதியானவர்கள் மாநில அளவில் தகுதித்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். 


இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும். இந்த உதவித்தொகை திட்டத்துக்காக பிரத்தியேக இணையதளமும் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Share:

பட்டதாரி ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம்!

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

கல்வித் தகுதி - B.SC ., B.ED. (MATHS)

மற்றும் TET தேர்ச்சி

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

:



Share:

11th English Quarterly Exam Important Questions 2023 ( 2, 5 Marks , One Marks )

11th English Quarterly Exam Important Questions 2023 ( 2, 5 Marks , One Marks )

11th English Quarterly Exam Important Questions 2023 ( 2, 5 Marks , One Marks )

இந்த 11th English Quarterly Exam Important Questions 2023 ( 2, 5 Marks , One Marks )
டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

தேர்விற்கான புதிய நடைமுறைகள் TNPSC வெளியீடு!

நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் TNPSC வெளியீடு!

தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் தொடர்பான செய்தி வெளியீடு..

அரசு பணிகளுக்கான நேர்முக தேர்வு முறையில், தமிழ்நாடு அரசு பணியாளர்

தேர்வாணையம், புதியமாற்றங்களை செய்து உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த, பல்வேறு மாற்றங்கள்

செய்யப்பட்டுள்ளன.அதன்படி, நேர்முக தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும்

விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி போன்ற அடையாளங்கள்

மறைக்கப்படும்.அதற்கு பதில், விண்ணப்பதாரர்களுக்கு ஏ, பி, சி, டி என்ற ஆங்கில எழுத்து முறைப்படி, நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படுவர்.

இதில் வரிசை மாற்று முறையும் பின்பற்றப்படும். இதனால், விண்ணப்பதாரர்கள் மீது,

சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் நீக்கப்படும்; வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Press News - 15.09.2023

Share:

20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம்!

 20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே selection grade வழங்கப்படும் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே selection grade வழங்கப்படும் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.



Share:

குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக மகளிர் உரிமை திட்ட தொகை 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது

குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக மகளிர் உரிமை திட்ட தொகை 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது...



குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன

நாகர்கோவில் :

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.

நாளை தொடக்க விழா

இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கி றார்.

தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கி றார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது

Share:

அரைநாள் மட்டுமே பள்ளி இயங்கும் – மாநில அரசு புதிய உத்தரவு!

அரைநாள் மட்டுமே பள்ளி இயங்கும் – மாநில அரசு புதிய உத்தரவு!

தெலங்கானா மாநிலத்தில் நாளை TS TET தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது

பள்ளி விடுமுறை

தெலுங்கானா மாநிலத்தில் TS TET தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்வுக்கு 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் இன்று இரண்டு தாள்களாக தேர்வு நடைபெற இருக்கிறது. அதாவது, TS TET முதல் தாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.

தமிழக அரசு பள்ளிகளுக்கு ரூ.126.45 கோடி நிதி ஒதுக்கீடு – சுற்றறிக்கை வெளியீடு!

மேலும், TS TET தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில் டெட் தேர்வுக்கான தேர்வு மையங்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் டெட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் இன்று நடைபெறும் என்பதால் இன்று பிற்பகல் முதல் அரை நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், நாளையும் தேர்வு மையமாக உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

Share:

11th Tamil - Quarterly Exam Answer key 2023 ( 15/09/2023 )

11th Tamil - Quarterly Exam Answer key 2023 ( 15/09/2023 )

11th Tamil - Quarterly Exam Answer key 2023 - ( Dindigul District ) - PDF Download Here

11th Tamil - Quarterly Exam Answer key 2023 - ( Emis - PDF Download Here

English

11th English - Quarterly Exam important questions 2023 - Download Here

11th Quarterly Exam Model Question paper 2023 - Download Here


Share:

மகளிர் உரிமைத் தொகை ₹ 1000 திட்டத்துக்காக அச்சடிக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளின் புகைப்படம் வெளியீடு!


மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக அச்சடிக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து மொத்தம் 1.06 கோடி மகளிா் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விண்ணப்பதாரா்கள் அளித்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக கைப்பேசிக்கு வரும் 18-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது, இந்த திட்டத்துக்கு தகுதி பெற்ற பெண்களின் வங்கிக் கணக்குகளை சரி பார்ப்பதற்காக முதல்கட்டமாக ரூ. O.10 பைசா செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்த திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதத்துக்கான தொகை ரூ.1,000 செலுத்தப்படும்.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகைக்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ள பயனாளர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் புகைப்படத்துடன் வலதுபுறம் திட்டத்தின் பெயரும், இடதுபுறம் கூட்டுறவு வங்கியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஏடிஎம் கார்டுகளில் உள்ள அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஏடிஎம் கார்டுகள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு படிப்படியாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது

Share:

நீண்ட கால விடுமுறை எடுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு மாத உதவித்தொகையை நிறுத்த உத்தரவு..!!

நீண்ட கால விடுமுறை எடுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு மாத உதவித்தொகையை நிறுத்த உத்தரவு..!!

தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர்.

திருப்பூர்:

அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சமூகநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 90 நாட்கள் கல்லூரிக்கு வராத மாணவர்கள் நீண்டகால விடுமுறையில் இருப்பதாக கருதப்படுவர். இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும்.

இடைநின்றவர்கள், மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள் பட்டியலை தொகுத்து ஆண்டுக்கு இருமுறை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாணவிகளுக்கு உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Share:

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்..!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்..!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

CG Book Distribution Proceedings - Download 


Share:

TET தேர்ச்சி இல்லை - ஆசிரியரின் தேர்வுநிலை நிராகரிப்பு - DEO Proceedings..!!!

TET தேர்ச்சி இல்லை - ஆசிரியரின் தேர்வுநிலை நிராகரிப்பு - DEO Proceedings..!!!

ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி இல்லை - ஆசிரியரின் தேர்வுநிலை நிராகரிப்பு - DEO Proceedings👇👇👇

29.07.2011 - க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என W.A.No.313 , 333 , 1891 2050 , 2082 2617 , 2795 OF 2022 வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அன்னார் நாளதுவரை ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெறாத நிலையில் அன்னாரது கருத்துரு பரிசீலிக்க இயலாது.

 மேற்காண் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரிபார்ப்பு பட்டியலில் கோரப்பட்ட விவரங்களின்படி முழுமையான வடிவில் தயார் செய்து தலைமையாசிரியர் உரியமுறையில் பரிசீலித்து உரிய ஆவணங்கள் இணைத்து தேர்வுநிலை பெற தகுதியிருப்பின் மட்டும் கருத்துருவினை மீள அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

 பெறப்பட்ட கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு அசலாக இத்துடன் இணைத்து திருப்பப்படுகிறது.



Share:

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அடுத்த மாதம் முதல் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் பைலட் முறையில் டிஜிட்டல் ரூபாயை குறிப்பிட்ட 9 வங்கிகளில் மட்டும் அடுத்த மாதம் முதல் அமல்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய்:

இந்திய ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சிக்கான பைலட் திட்டத்தை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக இந்திய ரிசர்வ் வங்கி பைலட் முறையில் டிஜிட்டல் ரூபாயை சில வங்கிகளில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, டிஜிட்டல் கரன்சிக்கான பைலட் திட்டத்தை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, YES வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகிய 9 வங்கிகளை தேர்வு செய்துள்ளது.

இதில் பங்கேற்கும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலமாக பயனர்கள் eR உடன் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மேலும், உராய்வு இல்லாத கிரெடிட்டுக்கான பப்ளிக் டெக் பிளாட்ஃபார்ம் (PTP), CBDC, UPI One World, RuPay On-The-Go மற்றும் Bharat Bill Payment System ஆகிய சேவைகளும் இந்த பைலட் திட்டத்தில் அடங்கும். இது நிதி இடைத்தரகர்கள் மூலமாக விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Share:

SBI வங்கியில் 2000 துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு..!!!

SBI வங்கியில் 2000 துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு..!!!

SBI வங்கியில் 2000 துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு. டிகிரி முடித்த பட்டதாரிகள் செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்....



Share:

மகளிா் உரிமைத் தொகை: ஒரு கோடி போ் தோ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!!!

 மகளிா் உரிமைத் தொகை: ஒரு கோடி போ் தோ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!!!

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை பெற 1.06 கோடி போ் தகுதி பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

பயனாளிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் வரும் செப். 15 முதல் மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டம் வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுவதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வழியாக அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க விழா வரும் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் அமைச்சா்கள் முன்னிலையில் திட்டம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் பெறப் போகிறாா்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடும், கூடுதலான பயனாளிகளைக் கொண்ட திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளுக்கு உள்ளது.

சிறு தவறு நடந்துவிட்டால், அதனால் கெட்ட பெயா் கிடைக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் எந்தவொரு தனி நபருக்கும் சிறு தவறுகூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் வரும் செப். 15 முதல் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

விரைவில் பற்று அட்டை: மகளிா் உரிமைத் தொகை பெற தகுதி பெற்ற பயனாளிகளில் பற்று அட்டை (டெபிட் காா்டு) இல்லாதவா்களுக்கு முதல்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், பிறகு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், பற்று அட்டை வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை அளிக்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படக் கூடாது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.


1.06 கோடி போ் தோ்வு: மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டவுடன், பயனாளிகளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில், பணம் எடுப்பது தொடா்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண்ணும் சோ்க்கப்பட வேண்டும்.


இந்தத் திட்டத்தில் இணைவதற்காக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இவா்களில் தகுதியுள்ளவா்களாக ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குறுஞ்செய்தி: தோ்வு செய்யப்பட்ட 1.06 கோடி பேரை தவிா்த்து, மற்றவா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததன் காரணங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவா்கள் மனநிறைவு அடைவா். பணம் கிடைக்காத மகளிா் யாராவது கேட்டால், அவா்களுக்கு உரிய பதில்களை தனியாக அலுவலா்களை அமா்த்தி கூற வேண்டும்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும். அரசு, வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கான தொடா்பு சீராக அமைந்து வருகிா என்பதை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்தத் திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.12,000 கோடி: ஆண்டுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிா் மாதந்தோறும் பயனடையும் மாபெரும் திட்டம் மகளிா் உரிமைத் தொகை திட்டமாகும்.

எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதை முறையாகச் செயல்படுத்தினால், அதனால் பயனடைந்தவா்கள் அரசை பாராட்டுவாா்கள். அத்தகைய பாராட்டுகளை பெற்றுத் தரும் திட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலா் என்.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, மகளிா் உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் க.இளம்பகவத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Share:

6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு.!

6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு.!

6 முதல்12-ம் வகுப்புகளுக்கான பொது காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

6 முதல்12-ம் வகுப்புகளுக்கான பொது காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை செப்டம்பர் 19-ல் பொது காலாண்டு தேர்வு தொடங்கி 27-ல் நிறைவடைகிறது.

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொது காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27-ல் நிறைவடைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Share:

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?

CLAT 2024 Exam: சட்டம் படிக்க ஆசையா?- டிச.3-ல் கிளாட் தேசிய நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?


நாடு முழுவதும் தேசியக் கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Consortium of National Law Universities) சார்பில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர ‘கிளாட்’ (Common Law Admission Test- CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக (5-year integrated Ll.B. மற்றும் Ll.M. programmes) இந்த நுழைவுத் தேர்வு நடக்கிறது.

டிசம்பர் 3ஆம் தேதி தேர்வு

அதேபோல தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்காக கிளாட் தேர்வு, டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

கிளாட் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தேர்வர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது அவசியம். மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் மதியம் 2 முதல் 4 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

தேர்வு ஆஃப்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம் கட்ட வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டியது முக்கியம். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பெற ரூ.500 கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.
ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முன்பதிவு செய்து, லாகின் செய்யும்போது மாதிரி வினாத் தாள்களைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

கூடுதல் தகவல்களுக்குhttps://consortiumofnlus.ac.in/ என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

Share:

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023 ! விண்ணப்பத்து விட்டீர்களா? மாணவர்களே!


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6

11th std தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, அக்டோபர் 2023 செய்திக்குறிப்பு

பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

2023-2024-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE / உட்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/ முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய

கடைசி நாள். 20.09.2023.

நாள்: 04.09.2023

Share:

School Shaala sidhi login password மறந்து விட்டீர்களா?..

School Shaala sidhi login password மறந்து விட்டீர்களா?..

 3 வழிகளில் RESET PASSWORD செய்யும் வழிமுறைகள் :


Shaala sidhi password reset செய்வது எப்படி?

 Note : Please input valid Mobile No./Email Id / Both which were given at the time of creation of user . 

METHOD - 1 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Enter your UDISE code 

Step 3 : Enter OTP sent to the mobile number used at the registration time 

METHOD - 2 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Get PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : Enter the mobile number or E - mail id used at the registration time 

METHOD - 3 

Step 1 : Click Forgot password below the login page 

Step 2 : Select Forgot PIN OTP in the top 

Step 3 : Enter your UDISE code 

Step 4 : System will send a request to NUEPA when you click on Send button


Share:

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு....!!!

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு....!!!

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் ( Alumni ) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

SPD Proceedings - Click here

Share:

TVSM நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு..!!

TVSM நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு..!!



TVSM நிறுவனத்தில் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தளம்: https://tvsmsampark.darwinbox.in/

TVSM நிறுவனத்தில் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

தகுதி:

TVSM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE / BTech / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 7 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

TVSM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TVSM-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

TVSM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

TVSM பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு TVSM 2023: இங்கே பதிவிறக்கவும்

விண்ணப்பிக்க: உடனே விண்ணப்பிக்க

அதிகாரப்பூர்வ தளம்: https://tvsmsampark.darwinbox








Share:

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

NET EXAM - சான்றிதழ் ஆன்லைனில் வெளியீடு..!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜூன் பருவத்துக்கான நெட் தேர்வு ஜூன் 13 முதல் 22-ம் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 4.62 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகளை என்டிஏ ஜூலை 24-ம் தேதி வெளியிட்டது. தேர்வு எழுதியவர்களில் 37,241 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் நெட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்


Share:

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை 5-ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு..!!

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை 5-ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு..!!

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

912 Temporary Posts Pay Continuous Order - Download here


Share:

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )

10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )


இந்த 10th Maths - Quarterly Important Questions 2023 ( 2,5 ,8 Marks )
டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 


Share:

TNPSC தேர்வு: விண்ணப்ப கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு!

TNPSC தேர்வு: விண்ணப்ப கால அவகாசம் குறித்த முக்கிய அறிவிப்பு!

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அவ்வகையில், பல்வேறு துணைச் சேவைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் (தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் மற்றும் பொது துணை சேவை) பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம், ஜூலை மாதம் 25-ம் தேதி என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்

Share:

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? இதோ வந்தது அறிவிப்பு..6 ஆயிரம் பணியிடம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்???

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? இதோ வந்தது அறிவிப்பு..6 ஆயிரம் பணியிடம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்???


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 6160 பயிற்சி (apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அப்ரெண்டிஸ் (பயிற்சி பணி) பணிக்கு ஆட்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு.. தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெளிவாக காணலாம்.

மொத்த பயிற்சி பணியிடங்கள்: மொத்தம் 6,160 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 648 தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி பிரிவினர் 123 பேரும் எஸ்.டி பிரிவினர் 6 பேரும் ஒபிசி பிரிவில் 174 பேரும் EWS பிரிவில் 281 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படும். தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் உண்டா? இந்த பயிற்சி பணியிடங்களை பொறுத்தவரை மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பிற சலுகைகள் எதுவும் வழங்க முடியாது. ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்தை எந்த வித பிரச்சினைகளும் இன்றி முடித்தவர்களுக்கு ஜூனியர் அஸ்சோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்பும் போது வெயிட்டேஜ் மற்றும் தளர்வுகள் வழங்கப்படும். இது பற்றிய விவரம் அவ்வப்போது வெளியிடப்படும்.

தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை, ஈரோடு,மதுரை, நாகர்கோவில், சேலம் , தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.09.2023 ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support