ஜன.22 பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் முடிவு என்ன?
விடுமுறை உத்தரவு:
2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களினால் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளைக் கடந்தும் 500 ஆண்டுகால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. அன்றைய
தினத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், கோயில்கள் மற்றும் ஊர்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகை போல் சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்களாக சுமார் 7,000 க்கும் அதிகமானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதை தவிர பல இலட்சக்கணக்கான மக்கள் ராமர் கோயிலில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதே போல் விழா நடக்க உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இன்னும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த சில நாட்களில் உரிய ஆலோசனைகளை நடத்தி விடுமுறை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.