ஜன.22 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

ஜன.22 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு!


உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நடைபெற இருக்கிறது. அதனால், அன்றைய தினம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழா வருகிற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அயோத்தியில் ரூ. 32 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் முக்கிய மைல்கல்லாக ராமர் கோவில் இருக்கும் என அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், 500 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் இது நடந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜன. 22 ஆம் தேதி ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க முதலமைச்சர் யோகி அதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் அன்றைய தினம் உத்திரபிரதேசம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் அனைத்தும் செயல்படாது என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support