தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – கல்வித்துறை தகவல்!

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – கல்வித்துறை தகவல்!


தமிழகத்தில் வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பள்ளி வேலை நாள்:

கொரோனா பெருந் தொற்று பாதிப்புகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறையை ஈடு செய்யும் வகையில் முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் நிலைமை சீரடைந்து மாணவர்கள் கல்வி ஆண்டில் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது அனைத்து சனிக்கிழமைகளும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது.

இதற்காக பாதுகாப்பு கருவி பள்ளி மாணவர்களுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 4, 20, பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய நான்கு சனிக்கிழமைகள் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments