பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!



தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரிசி குடும்பத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்பட இருப்பதாக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் ஊழியர்கள் மற்றும் எந்த பொருளும் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த பொங்கல் பரிசு பெற முடியாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், இந்த பரிசு தொகுப்பினை வழங்குவதற்கென ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் கூடுதல் பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரையிலும் ரேஷன் கடைகளையும் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ரூ. 1000 ரொக்கத் தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support