தமிழகத்தில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்கள் நியமனம் – அரசு முடிவு!
தமிழகத்தில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நாளை (ஜன. 9) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பணியிடங்கள்
தமிழகத்தில் ஊதிய உயர்வு (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் போன்ற 6 கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி போக்குவரத்து துறை ஊழியர்கள் நாளை (ஜன. 9) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு சார்பில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என போக்குவரத்து துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு சார்பில் தற்காலிக ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.