ஆங்கில ஆய்வகம் செயல்படுகிற 6,029 அரசு பள்ளிகளுக்கு ஹெட்ஃபோன் சாதனம் - கல்வித் துறை சார்பில் விநியோகம்!


ஆங்கில மொழி ஆய்வகங்கள் இயங்கி வரும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஹெட்ஃபோன் சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் (இடைநிலை) பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை (பேசுவது, கேட்பது, எழுதுவது, கவனிப்பது) மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகங்கள் ஏற்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து, மொழிகள் ஆய்வகத்துக்காக தனி இணையதளத்தை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

தற்போது அனைத்து ஆங்கிலமொழி ஆய்வகங்களை மேம்படுத்தும் வகையில், மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஹெட்ஃபோன் சாதனங்களும்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வாயிலாக இந்த சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை மாவட்டகல்விஅலுவலகங்களுக்கு (இடைநிலை) விநியோகிக்கப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்த சாதனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...