இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு – அரசின் புதிய ஏற்பாடு!

பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்காவது சனிக்கிழமை மட்டும் மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நோ பேக் டே:

தமிழக உட்பட பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு தற்போது 2023-24 ஆம் கல்விஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அதிக நாட்கள் விடுமுறை அறிவித்ததன் காரணத்தினால் இனி வரும் அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனால், தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் புத்தக சுமையை குறைப்பதற்காக இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நோ பேக் டே கொண்டாடப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தகவல் தொடர்பு திறன், படையாற்றலை வளர்ப்பதற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

தொடர்ந்து, 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றலின் ஒரு பகுதியாக வாழ்வாதாரம் குறித்த தீம் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கு விரும்பிய தொழிலை பற்றி பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குடும்பத்தில் வரவு செலவுகளை திட்டமிட, அஞ்சலகம், கட்டுமான தளங்கள், ரேஷன் கடைகளுக்கு செல்வது, நிதி பரிவர்த்தனைகள் ஆகிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Post a Comment

0 Comments