மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டு மாதம் வரை நடத்த உத்தரவிட்டு இருக்கிறோம். குறிப்பாக மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். இதுதொடர்பாக போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் பஸ் பாஸ் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments