வெயிலின் தாக்கம் பள்ளிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை., அறிவிப்பு வெளியீடு!

வெயிலின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை., அறிவிப்பு வெளியீடு!

 வெயிலின்தாக்கம் பல்வேறு மாநிலங்பளிலும் சற்று அதிகமாகவே உள்ளது .இந்நிலையில் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அதிகரிக்கப்பட்டு வருகிறது .அதே போல்தான் ஒரு மாநிலத்தில் கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூன் 15-ம் தேதி வரை கோடை விடுமுறை என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது .,அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் ?

கோடை விடுமுறை:

உத்திரபிரதேச மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து மே 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், மாணவர்கள் பள்ளிகள் திறப்பு குறித்தான தகவலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தான தகவல் வெளியாகவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டுமல்லாமல் ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப சலனத்தின் காரணமாக பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...