பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை இரண்டாம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை என பள்ளி பஞ்சாப் மாநில கல்வித்துறையின் சார்பில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட இருக்கிறது. அதே போல, தமிழகத்திலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 29 முதல் மே 31ஆம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி வகுப்புகள் துவங்கும் எனவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 1ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூலை இரண்டாம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை எனவும் ஜூலை 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸின் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
1 Comments
No vendum
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.