தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்., அதிரடி சரவெடி!


வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாகத் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று (மே 26) அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


’’பள்ளிகள் திறப்பு குறித்த தலைமைச்செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கான ஆணைகள் தயாராகி வருகின்றன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ள முதலமைச்சர் இதுகுறித்துக் காலையிலேயே தொலைபேசியில் பேசியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க முதமைச்சரிடம் 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...