தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை விடப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்ல கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

பள்ளிகளுக்கு அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் எனவும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன் பின் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் ஜூன் மாதம் முதல் முழு நேரம் பள்ளிகள் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில் சில பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...