அண்ணா பல்கலை. இணைப்பு அங்கீகாரம்: ஏப்.17-க்குள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலை. மூலம் புதுப்பிக்க வேண்டும்.

2023-24 கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பிக்க கல்லூரிகள் கடந்த ஜனவரி முதல் விண்ணப்பித்து வருகின்றன. தனியார் கல்லூரிகள் ஏப்.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை ஏப்.17-ம் தேதிக்குள் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை தவறவிடும் கல்வி நிறுவனங்கள், அபராதக் கட்டணம் செலுத்தி ஏப்.24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...