மே 1ம் தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம்....!!!!

 மே 1ம் தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம்....!!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது...

வருகிற மே மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடக்கும் முகாமில் கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, தடகளம், டென்னிஸ், ஆக்கி, டேக்வாண்டோ, இறகு பந்து, யோகா, கையுந்து பந்து என 10 விளையாட்டுகளில் பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆசிரியர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். நாளை மறுநாள் முதல் நீச்சல் பழகுதல் பயிற்சி தொடங்கப்படும். இந்நிலையில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள், சிற்றுண்டி வழங்கப்பட்டு முகாம் நிறைவு நாளில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...