காதலே என் காதலே - புதுக்கவிதை!

#காதலே_என்_காதலே


நித்தமும் போராடும்

வாழ்வான போதும் 

மொத்தமும் நீயாகி

என்னை ஆள்கின்றாயே 

சித்தம் முழுவதும்

நிறைந்து வாழ்கின்றாயே . . .


ஏற்றங்கள் இல்லாத

மாற்றங்கள் வந்தாலும் 

எப்போதும் என்னோடு

துணையாக நிற்கின்றாயே 

ஆதரவாய் தோள்சாய்த்து

அரவணைத்துக் காக்கின்றாயே . . .


ஓரவிழிப் பார்வையில்

ஓராயிரம் கதைசொல்லி

ஓரவஞ்சனை ஏதுமின்றி

என்னுள் உறைகின்றாயே

ஊனோடு உயிராகி

எனக்காகவே வாழ்கின்றாயே . . .


நமக்கான நேரங்கள்

அரிதாகிப் போனாலும் 

கிடைக்கின்ற பொழுதுகளில்

இன்பத்தைத் தருகின்றாயே 

வாஞ்சையுடன் வந்தேதான் 

வசந்தத்தைப் பெருகின்றாயே . . .


சிலநேரம் துன்பங்களால்

துவண்டு நான் போனாலும்

துயர் துடைக்கும் தூயவனாய்

கரம் கோர்த்து கொள்கின்றாயே

மனம் மயக்கும் மாயவனாய்

மந்திரம் செய்து வெல்கின்றாயே . . .


கால் முளைத்த சூரியனே

காலமெல்லாம் தீராத

காதல் கொள்ளவா இல்லை

அழகுக் கன்னி நிலவாகி

உன்னை அணைத்துக் கொள்ளவா

சொல்லடா யென் மாயக்கண்ணா . . .


        *ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...