உலக புத்தக தினம் கவிதை!

#உலக_புத்தக_தினம் 

மனிதனுள் 

மறைந்திருக்கும்

மனிதத்தை 

தட்டியெழுப்பும்

தனியொருவன்

புத்தகம் . . !


விஞ்ஞான

வளர்ச்சியையும்

மெய்ஞான

புரிதலையும்

அழகாக 

எடுத்துரைக்கும்

அன்பாளன்

புத்தகம் . . !


காதலின் 

மகத்துவத்தை

வெற்றுக் 

காகிதத்தில்

அச்சிலேற்றி

இரவு பகல் பாராது

நம் அரவணைப்பில்

அகலாதிருக்கும்

வசியக்காரன்

புத்தகம் . . !


பண்டைய 

கலாச்சாரம் போற்றி

பண்பாடு வளர்த்து

பாசம் மாறா

பண்போடு வாழ

பாடம் சொல்லும்

பண்பாளன்

புத்தகம் . . !


அகிம்சாவாதி

காந்தியையும்

புரட்சியாளன்

நேதாஜியையும் 

அறிந்து கொள்ள

அரிச்சுவடியாகி

நம்முன் நிற்பவன்

புத்தகம் . . !


மனிதன் 

கண்டுபிடிப்புகளில்

மைல் கல்லாய் வந்து

மகத்துவம் கண்ட

மாயவன்

புத்தகம் . . !


குழந்தைகள் முதல்

பெரியவர் வரை

அனைவர் பார்வையிலும்

பாரபட்சமின்றி 

நிறைந்திருந்து

நன்மை புரியும்

நல்நண்பன்

புத்தகம் . . !


என் விழியீர்ப்பில்

விலகாமலிருந்து

விரல் தீண்டலில்

சுகம் காணக்

காத்திருக்கும்

என்னுயிர்க்

காதலன் புத்தகம் . . !


வாசிப்பின்

உன்னதம் 

உணர்ந்து 

வாசிப்பை நேசிப்பவன்

வாழ்வில் என்றும் 

தோற்பதில்லை . . !


#உலக_புத்தக_தினம்_நல்வாழ்த்துகள்


                       *ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...