தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் – குழுவின் தலைவர் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் – குழுவின் தலைவர் அறிவிப்பு!!


தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மாநில கல்விக்கொள்கை தயார் நிலையில் உள்ளதாக குழுவின் தலைவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாநில கல்விக்கொள்கை

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழகத்திலேயே பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 17 பேர் கொண்ட குழுக்கள் கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகின்றனர். அதாவது, தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையின் படி 3 முதல் 5 ஆம் வயது வரை உள்ள குழந்தைகளை பிளே ஸ்கூலில் மட்டுமே சேர்க்கும் படியும், ஒன்றாம் வகுப்பில் இருந்து இருந்துதான் பள்ளி மாணவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுக்கும்படியான அடிப்படைக் கல்வியை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் இந்த புதிய கல்விக் கொள்கையின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான கல்விக் கொள்கை தயார் செய்யப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

Share:

School Morning Prayer Activities 31-08-2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள் உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை
நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்

– அன்னை தெரசா

பொது அறிவு :

1. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

2. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 Fahrenheit - a scale of temperature

வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி
டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.

Fake - false one. பொய்யான

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
ஆகஸ்ட்31
மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 
மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 
இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

31.08. 2023

*ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி. சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பாக ஆதித்யா- எல் இயங்கும். இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சி ஆகும்.

*உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

*தண்டவாள சீரமைப்பு பணியால் அரக்கோணம் - சென்னை ரயில்கள் ரத்து.

*2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்.

*உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.

*யூ. எஸ். ஓபனில் மோசமான தோல்வியை சந்தித்தார் - வீனஸ் வில்லியம்ஸ்.

Today's Headlines

*Rehearsal over: Aditya L-1 ISRO is in action getting ready to fly.  Aditya-L will operate as an observatory to study the Sun.  This is a new initiative for India.

 *In Uttar Pradesh, a man spent 12 years building a two-storey house with 11 rooms underground.

 *Arakkonam-Chennai trains were canceled due to track maintenance work.

 *Air pollution in Chennai to increase by 27 percent by 2030- study informs.

 * World Cup chess tournament silver medalist

 Pragnananda received a grand welcome at the Chennai airport.

 *U.  S.  Worst loss in Open - Venus Williams.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை..!!

பள்ளி மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்: தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை..!!

தமிழகத்தில் மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதுடன், ஊக்கத் தொகை அல்லது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்கலாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: நாளிதழ் வாசிப்பை பள்ளிபருவத்திலிருந்தே மாணவர்களுக்கு பழக்கி விட்டால், அவர்களுக்கு அது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் பயன்தரும்.

கேரளாவைப் போல.. கேரள மாநிலத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளிதழ் வாசிப்புக்கு 10 மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார்.

இதேபோல, இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி, தினந்தோறும் நாளிதழை வாசித்து, அதற்கு ஜூன் முதல் மார்ச் வரை மாதந்தோறும் 10 மதிப்பெண்களுக்கு ‘முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு’ என்ற பெயரில் தேர்வு வைத்து, மொத்தம் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உதவித் தொகையோ அல்லது உயர்கல்வியில் முன்னுரிமையோ வழங்கலாம்.

எஸ்.சிவகுமார்

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான நாளிதழ்களை வாங்கினால்தான் அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நாளிதழ்களை வாங்க உள்ளூரில் உள்ள சேவை சங்கங்கள், தன்னார்வலர்களின் உதவியை நாடலாம்.



பொது அறிவு மேம்படும்: தற்காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளுமே போட்டித் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுவதால், பொது அறிவு என்பது மிகவும் அவசியமானது. நாளிதழ்களை வாசிப்பதால், பொது அறிவு மேம்படுவதுடன், மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் வளரும் சூழலும் ஏற்படும்

பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ள வாசிப்பு இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இது அமையும். பள்ளிக் கல்வித்துறை இதற்கான திட்டமிடுதல்களை மேற்கொண்டு, நாளிதழ் வாசிப்பை அன்றாட வழக்கமாக இளம் வயதிலேயே பழக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share:

இன்று இரவு 8.37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் சூப்பர் மூன் – பார்க்க தவறவிடாதீர்கள்!

இன்று இரவு 8.37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் சூப்பர் மூன் – பார்க்க தவறவிடாதீர்கள்!

வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக இன்று இரவு 8.37 மணியளவில் நிலா நீல நிறத்தில் காட்சியளிக்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் மூன்:

பௌர்ணமி நிலவை விட வழக்கத்திற்கும் அதிகமாக நிலா இன்று கூடுதல் வெளிச்சத்துடன் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சூப்பர் மூன் எனப்படும் அதிவெளிச்சமான நிலவினை இன்று இரவு 8.37 மணி அளவில் பொதுமக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தென்படும்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே இரண்டு பௌர்ணமிகள் இருக்கும் நிலையில் பூமிக்கு மிக அருகில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 444 கிலோமீட்டர் தூரத்தில் வந்து நிலவு நீல நிறத்தில் பிரகாசிக்க இருக்கிறது. அதாவது, வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக அல்லது சூரியனிடமிருந்து வரும் சிவப்பு ஒளியை தடுக்கும் வகையில் ஏதேனும் கதிர் குறுக்கே வருவதால்தான் சந்திரன் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.!

மக்களே.. இன்று 8:37 மணிக்கு நீல நிறத்தில் காட்சியளிக்க இருக்கும் ப்ளூ மூனை பார்க்க மறந்து விடாதீர்கள். பின்னர், பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த சூப்பர் மூனை மீண்டும் பார்வையிட முடியும்

Share:

தமிழக பள்ளி மாணவர்களே லீவுக்கு ரெடியா???…, தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வருது!!

தமிழக பள்ளி மாணவர்களே லீவுக்கு ரெடியா???…, தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வருது!!


தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் 2 வாரங்கள் தாமதமாகவே திறக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வை எதிர்நோக்கி உள்ளது. இந்த காலாண்டு தேர்வுகளானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செப்டம்பர் மாத 2வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதியுடனும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதாவது, 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் (10 நாட்கள்), 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் (5 நாட்கள்) விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Share:

மதிப்பெண் சான்றிதழில் பிழை திருத்த வாய்ப்பு..!!!

மதிப்பெண் சான்றிதழில் பிழை திருத்த வாய்ப்பு..!!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர், தாய், தந்தையின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் இணைத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மூலம் செப்.8 க்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம்செய்ய வேண்டும்.

தனித்தேர்வர்களிடமிருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும், என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Share:

பட்டதாரி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பணி; பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை..!!!

பட்டதாரி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பணி; பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை..!!!

சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படிஉயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வேறு பணிக்குசென்றுவிட்டனர்.

அவர்களை உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர் என்ற போர்வையில் மீண்டும் பழைய பணியில் அமர்த்த விதிகளில் இடமில்லை எனவும், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே தாமதமின்றிஉயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.


Share:

BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்.!!

BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்.!!

அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Share:

6 - 12 மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வுதான்.. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புது அப்டேட்..!!

6 - 12 மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வுதான்.. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புது அப்டேட்..!!

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வினாத்தாளை வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் திறப்பில் கால தாமதம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கியதை அடுத்து நடப்பாண்டுதான் பள்ளிகள் கடந்த ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.

Share:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு..!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம்: கல்லூரி இயக்ககம் உத்தரவு..!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணம் கலை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூடலூர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்கவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். சாதி பாகுபாடுகளை காட்டி மாணவர்களை தூண்டிவிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பேராசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share:

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவையில் ஒருவர் கூட இல்லை..!!

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவையில் ஒருவர் கூட இல்லை..!!

நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவைக்கு ஒரு விருது கூட இல்லை.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 5 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விண்ணப்பித்த ஒரு ஆசிரியர் பெயர் கூட விருது பட்டியலில் இல்லை. கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிந்திருந்த சூழலில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதிலும் விண்ணப்பித்த யாரும் விருதுக்கு தேர்வாகாதது கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share:

ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைகள்..!!

ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைகள்..!!


ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைகள்
CEO Instructions - Download here

Share:

GATE 2024; கேட் தேர்வு அட்டவணை, மதிப்பெண் முறை என்ன?

GATE 2024; கேட் தேர்வு அட்டவணை, மதிப்பெண் முறை என்ன?


கேட் தேர்வு 2024: தகவல் குறிப்பேட்டை வெளியிட்டது ஐ.ஐ.எஸ்.சி; தேர்வு கால அட்டவணை மற்றும் மதிப்பெண்.

GATE 2024: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) பெங்களூர் பொறியியல் பட்டதாரி ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) 2024க்கான தகவல் சிற்றேட்டை வெளியிட்டுள்ளது. புதிய காலக்கெடுவின்படி, விண்ணப்பப் பதிவு இப்போது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி முடிவடையும்.

திருத்தப்பட்ட தகவல் சிற்றேடு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது — gate2024.iisc.ac.in.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, GATE 2024 தேர்வு பிப்ரவரி 3, 4, 10, மற்றும் 11, 2024 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இந்தத் தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளாக தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படும்.

தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜனவரி 3, 2024 அன்று கிடைக்கும். GATE 2024 க்கான முடிவுகள் மார்ச் 16 அன்று அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து மதிப்பெண் அட்டைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 23 முதல் மே 31 வரை கிடைக்கும்.

மொத்தம் 30 தேர்வுத் தாள்கள் இருக்கும். கேட் தேர்வுத் தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். மேலும் கொள்குறி வகை வினாக்களாக மட்டுமே இருக்கும். கேள்விகளின் வகைகளில் கொள்குறி வகை கேள்விகள் (MCQ), பல தேர்வு கேள்விகள் (MSQ) மற்றும் எண்ணியல் பதில் வகை (NAT) கேள்விகள் ஆகியவை அடங்கும். MCQ களில், நான்கு விருப்பங்களில் ஒன்று மட்டுமே சரியானது. MSQகளில், நான்கு விருப்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை சரியானவை. மற்றும் NAT கேள்விகளுக்கு, மெய்நிகர் விசைப்பலகையைப் பயன்படுத்தி மட்டுமே பதில் அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கணக்கீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆன்-ஸ்கிரீன் விர்ச்சுவல் கால்குலேட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும்; 1 மதிப்பெண் MCQக்கு, தவறான பதிலுக்கு 1/3 கழிக்கப்படும். இதேபோல், 2-மதிப்பெண் MCQ க்கு, தவறான பதிலுக்கு 2/3 கழிக்கப்படும். MSQ மற்றும் NAT கேள்விகளுக்கு தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை. மேலும், எந்த ஒரு கேள்விக்கும் பகுதி மதிப்பெண்கள் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது இரண்டு தேர்வுத் தாள்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கொடுக்கப்பட்ட சேர்க்கைகளின் பட்டியலிலிருந்து இரண்டு தாள் சேர்க்கைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதிய இரண்டு தாள் சேர்க்கைகள் கிடைத்தால், விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வை மறுபரிசீலனை செய்து, முரண்படாத அட்டவணையுடன் தேர்வுத் தாள்களைத் தேர்வுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும். இருப்பினும், இரண்டு தேர்வுத் தாள்களை எழுதும் விண்ணப்பதாரர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும்.



Share:

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கோடை வெயில் காரணமாக இந்த ஆண்டு வகுப்புகள் பள்ளிகளில் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது.
பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன. பல பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் வெவ்வேறு வகுப்புகளுக்கு அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு எப்போது காலாண்டு விடுமுறை விடப்படும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் 1-5, 5-10, 11, 12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வுகள் செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகள் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ந்தேதி தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ந்தேதி என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.


Share:

எண்ணும் எழுத்தும் திட்டத்தை B.Ed மாணவர்களைக் கொண்டு மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

எண்ணும் எழுத்தும் திட்டத்தை B.Ed மாணவர்களைக் கொண்டு மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்டக் கிளையின் சார்பில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

9th Standard - Quarterly Exam 2023 - Question Papers & Answer Keys

9th Standard - Quarterly Exam 2023 - Question Papers & Answer Keys

        9th standard students and teachers. Here we have provided Quarterly Exam Model question papers 2023 - 2023 for class 9 students. previous year Original Quarterly question papers and answer key in PDF format for students and teachers to download.  We upload here the answer keys for all the districts within an hour of the completion of the quarterly exams for the students through our kalvikavi.com website.  You can download question paper and answer keys 2023 here in pdf format for students to write these as assignments during the quarterly exam holidays.

9th Quarterly Syllabus 2023 ( Portion)- 2024 - All Subjects

9th Tamil

  • 9th Tamil First Mid Term & Quarterly Syllabus 2023 - 2024 - Download Here

9th English

  • 9th English First Mid Term & Quarterly Syllabus 2023 - 2024 - Download Here

9th Mathematics

  • 9th Mathematics First Mid Term & Quarterly Syllabus 2023 - 2024 - Download Here

9th Science

  • 9th Science First Mid Term & Quarterly Syllabus 2023 - 2024 - Download Here

9th Social science

  • 9th Social science First Mid Term & Quarterly Syllabus 2023 - 2024 -  Download Here

9th Quarterly Exam 2023 - Question Papers & Answer Keys

Tamil | தமிழ்

9th Tamil - Quarterly Exam Model Question paper 2023 ( 1 ) - Download Here

9th Tamil - Quarterly Exam Model Question paper 2023 ( 2 ) - Download Here

9th Tamil - Quarterly Exam Original Question paper 2023 - Download Here

9th Tamil - Quarterly Exam Original Question paper 2023 - Download Here

English | ஆங்கிலம்

9th English - Quarterly Exam Model Question paper 2023 ( 1 ) - Download Here

9th English - Quarterly Exam Model Question paper 2023 ( 2 ) - Download Here

9th English - Quarterly Exam Original Question paper 2023 - Download Here

9th English - Quarterly Exam Original Question paper 2023 - Download Here

Maths | கணிதம்

9th Maths - Quarterly Exam Model Question paper 2023 ( 1 ) - Tamil Medium Download Here

9th Maths - Quarterly Exam Model Question paper 2023 ( 2 ) - English Medium Download Here Here

9th Maths - Quarterly Exam Original Question paper 2023 - Tamil Medium Download Here

9th Maths - Quarterly Exam Original Question paper 2023 - English Medium Download Here

Science | அறிவியல்

9th Science - Quarterly Exam Model Question paper 2023 ( 1 ) - Tamil Medium Download Here

9th Science - Quarterly Exam Model Question paper 2023 ( 2 ) - English Medium Download Here

9th Science - Quarterly Exam Original Question paper 2023 - Tamil Medium Download Here

9th Science - Quarterly Exam Original Question paper 2023 - English Medium Download Here

Social science | சமூக அறிவியல்

9th Social Science - Quarterly Exam Model Question paper 2023 ( 1 ) - Tamil Medium Download Here

9th Social Science - Quarterly Exam Model Question paper 2023 ( 2 ) - English Medium Download Here

9th Social Science - Quarterly Exam Original Question paper 2023 - Tamil Medium Download Here

9th Social Science - Quarterly Exam Original Question paper 2023 - English Medium Download Here

Share:

9th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Tamil - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Tamil - Quarterly Exam  Model Question Paper (1) 2023 - Download Here

9th Tamil - Quarterly Exam 2023 Model Question Paper 2 - Download Here

2022 - 2023

9th Tamil

9th Tamil - Quarterly Exam 2022 | Original Question Paper | Tirupattur District - Tamil Medium PDF Download Here

9th Tamil - Quarterly Exam Original Question Paper - Namakal District - Tamil Medium Download Here

9th Tamil - Quarterly Exam Original Question Paper | Nagapattinam District (TNTET Arts Youtube) - Tamil Medium Download Here 

9th Tamil - Quarterly Exam  Original Question Paper | Tenkasi District | P.Sivasamy M.A.,B.Ed  - PDF Download Here  

9th Tamil - Quarterly Exam Question Paper Madurai Distict- Download Here

9th Tamil - Quarterly Exam Original Question Paper | kallakurinchi District (TNTET Arts Youtube) - - Download Here

All so Read - Useful 9th Quarterly Question Paper 2023

9th All Subjects Quarterly Exam Original Question Paper 2023

Tamil

9th Tamil Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

English

9th English Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Maths

9th Maths Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Science

9th Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Social

9th Social Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Share:

9th English - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th English - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th English - Quarterly Exam Model Question Paper 2023 - English Medium PDF Download Here

9th English - Quarterly Exam 2023| Model Question Paper with Answer Key | RASI Guide - English Medium PDF Download Here

9th All Subjects - Quarterly Exam 2023 | original Question Paper -  PDF Download Here

2022 - 2023

9th English

9th English - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - English Medium PDF Download Here

9th English - Quarterly Exam Original Question Paper | Thiruvannamalai District - English Medium PDF Download Here

9th English  - Quarterly Exam Original Question Paper | Nagapattinam District  - English Medium PDF Download Here  

9th English  - Quarterly Exam Original Question Paper Chennai District  - English Medium PDF Download Here

9th English - Quarterly Exam Original Question Paper | Tenkasi District - PDF Download Here 

All so Read - Useful 9th Quarterly Question Paper 2023

9th All Subjects Quarterly Exam Original Question Paper 2023

Tamil

9th Tamil Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

English

9th English Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Maths

9th Maths Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Science

9th Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Social

9th Social Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Share:

9th Science - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Science - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Science - Quarterly Exam Model Question Paper 2023 - English Medium PDF Download Here

9th Science - Quarterly Exam 2023| Model Question Paper - English Medium PDF Download Here

9th All Subjects - Quarterly Exam 2023 | original Question Paper -  PDF Download Here

2022 - 2023

9th Science

9th Science - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - English Medium PDF Download Here

9th Science - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - Tamil Medium PDF Download Here

9th Science  - Quarterly Exam Original Question Paper | Erode District  - English Medium PDF Download Here  

9th Science  - Quarterly Exam Original Question Paper Chennai District  - English Medium PDF Download Here

9th Science - Quarterly Exam Original Question Paper | Tenkasi District - PDF Download Here 

All so Read - Useful 9th Quarterly Question Paper 2023

9th All Subjects Quarterly Exam Original Question Paper 2023

Tamil

9th Tamil Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

English

9th English Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Maths

9th Maths Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Science

9th Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Social

9th Social Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Share:

9th Maths - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Maths - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Maths - Quarterly Exam Model Question Paper 2023 - English Medium PDF Download Here

9th Maths - Quarterly Exam 2023| Model Question Paper with Answer Key | RASI Guide - English Medium PDF Download Here

9th All Subjects - Quarterly Exam 2023 | original Question Paper -  PDF Download Here

2022 - 2023

9th Maths

9th Maths - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - English Medium PDF Download Here

9th Maths - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - Tamil Medium PDF Download Here

9th Maths  - Quarterly Exam Original Question Paper | Nagapattinam District  - English Medium PDF Download Here  

9th Maths  - Quarterly Exam Original Question Paper Chennai District  - English Medium PDF Download Here

9th Maths - Quarterly Exam Original Question Paper | Tenkasi District - PDF Download Here 

All so Read - Useful 9th Quarterly Question Paper 2023

9th All Subjects Quarterly Exam Original Question Paper 2023

Tamil

9th Tamil Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

English

9th English Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Maths

9th Maths Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Science

9th Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Social

9th Social Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Share:

9th Social Science - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Social Science - Quarterly Exam Question Paper 2023 - 2024 - Answer Key

9th Social Science - Quarterly Exam Model Question Paper 2023 - English Medium PDF Download Here

9th Social Science - Quarterly Exam 2023| Model Question Paper - English Medium PDF Download Here

9th All Subjects - Quarterly Exam 2023 | original Question Paper -  PDF Download Here

2022 - 2023

9th Social Science

9th Social Science - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - English Medium PDF Download Here

9th Social Science - Quarterly Exam Original Question Paper | Tirupattur District - Tamil Medium PDF Download Here

9th Social Science  - Quarterly Exam Original Question Paper | Erode District  - English Medium PDF Download Here  

9th Social Science  - Quarterly Exam Original Question Paper Chennai District  - English Medium PDF Download Here

9th Social Science - Quarterly Exam Original Question Paper | Tenkasi District - PDF Download Here 

All so Read - Useful 9th Quarterly Question Paper 2023

9th All Subjects Quarterly Exam Original Question Paper 2023

Tamil

9th Tamil Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

English

9th English Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Maths

9th Maths Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Science

9th Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Social

9th Social Science Quarterly Exam Original Question Paper 2023 - Download here ( All District )

Share:

காலை சிற்றுண்டி திட்டத்தில் விலக்கு கோரும் ஆசிரியர்கள்!


தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும், அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


அதேநேரத்தில், அந்த திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என பல இடங்களில் சுற்றறிக்கையாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

தற்போது, தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும், இ.எம்.ஐ.எஸ்., பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

இந்நிலையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக் கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Share:

பள்ளிக்கு வராத 14 ஆயிரம் மாணவர்கள் எங்கே? தேடிப் பிடிக்க முடியாமல் தவிக்கும் தலைமையாசிரியர்கள்!

மதுரையில் பள்ளிக்கு வராமல் இடைநின்ற 14 ஆயிரம் மாணவர்களை, 'எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்க பாருங்கள்' என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை கறார் உத்தரவிட்டுள்ளதால், 'இல்லாத மாணவர்களை எங்கே போய் தேடுவோம்' என, புலம்பித் தவிக்கின்றனர் தலைமை ஆசிரியர்கள்.


கல்வித்துறை சார்பில் செப்., 1, 2ல் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து அரசு, உதவிபெறும் உயர், மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் 'கூகுள் மீட்'டில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.


டி.இ.ஓ.,க்கள் முத்துலட்சுமி, சாய் சுப்புலட்சுமி, உதவித் திட்ட அலுவலர் கார்மேகம், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில்குமார் பங்கேற்றனர். மாவட்டத்தில் 2 - 12ம் வகுப்பு வரை 15 நாட்களுக்கு மேல் 14 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களை விரைவில் தேடி கண்டுபிடித்து தலைமையாசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.


இலவச திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழை பள்ளியில் வழங்கக்கூடாது. சேவை மையம் மூலம் வழங்க தேவையான 'ஆன்லைன்' அனுமதியை தலைமையாசிரியர் நிலுவையின்றி வழங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. மாணவர்கள் முகவரியில் தேடி சென்றால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.


பல குடும்பங்களில் மாணவர் வருவாய் முக்கிய தேவையாக உள்ளதால் பெற்றோரே அனுப்ப மறுக்கின்றனர். சில குடும்பங்கள் வெளியூறுக்கு குடியேறிவிட்டன. இப்படியிருக்கும் போது அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை. பள்ளியில் சேர்ப்பது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.

Share:

நான் முதல்வன் திட்டம் - 2023-2024ஆம் கல்வியாண்டு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதவாரியான பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நான் முதல்வன் திட்டம் - 2023-2024ஆம் கல்வியாண்டு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதவாரியான பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

CG - 11 & 12 ( Time table and Lesson Plan - Download here

11th Lesson Plan - Download here

12th Lesson Plan - Download here

Share:

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி..!!

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி..!!

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச்சா்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

ஆசிரியா்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோனிக்ஸ்’ முறையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடுகள் மூலம் எழுத்து ஒலிகளைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறிதல் உள்ளிட்ட 5 அத்தியாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக்கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கில்பா்ட் ஜாலி உருவாக்கிய ‘ஜாலி ஃபோனிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியா்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலிகள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.

ஜாலி லோ்னிங் லிமிடெட் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளா்களால் ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆா்வத்தை வெளிப்படுத்தினார்.

திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநா் எம். ஆா்த்தி, ஜாலி ஃபியூச்சா்ஸ் திட்ட மேலாளா் எஸ்.வி.கோமதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா் என அவா்கள் தெரிவித்தனா்.


Share:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வெழுத போறீங்களா..? இலவசமா பயிற்சி தராங்களாம்..! உடனே பாருங்க கண்டிப்பா யூஸ் ஆகும்..!!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வெழுத போறீங்களா..? இலவசமா பயிற்சி தராங்களாம்..! உடனே பாருங்க கண்டிப்பா யூஸ் ஆகும்..!!!


தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலமாகத்தான் பணியாளர்கள் தேர்வு செய்யபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வை TNPSC நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் குரூப் 4 பதவிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, 7 ஆயிரத்து 301 ஆக இருந்த குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் தற்பொழுது 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சென்னையில் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். அனைத்து திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மாற்றுத்திறனாளி மாணவர்கள் கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ளும் படியும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இந்த பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை அறிய 9499966023 என்கிற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Share:

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்தது பிரக்யான் ரோவர் – அடுத்த 14 நாட்கள் குறித்த அலசல்!!!

விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்தது பிரக்யான் ரோவர் – அடுத்த 14 நாட்கள் குறித்த அலசல்!!!

இந்தியாவின் சாதனையான சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்துள்ளது.

சந்திராயன்- 3:

இந்தியாவின் சந்திராயன் -3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வரலாற்று தருணத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் அது நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் அடுத்த 14 நாட்கள் ஆய்வு நடத்த இருக்கிறது. இந்நிலையில் அடுத்து லேண்டர் செய்ய இருக்கும் வேலைகளை பற்றி பார்க்கலாம்.

அதாவது நிலவில் 15 நாட்கள் பகல், 15 நாட்கள் இரவாக இருக்கும். இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யா ரோவர் சோலார் பேனல்கள் மூலம் செயல்பட கூடியது. அதனால் சூரிய வெளிச்சம் இருக்கும் 14 நாட்கள் மட்டுமே அதன் ஆயுட்காலம். அதனால் இந்த 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் இணைந்து பல ஆய்வுகளை செய்ய இருக்கிறது. மொத்தம் 4 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. அவை, ராம்பா (ரேடியோ அனாடமி ஆப் மூன் பவுண்ட் ஹைபர்சென்சிடிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர்), சேஸ்ட் (சந்திராஸ் சர்பேஸ் தெர்மோ பிசிகல் எக்ஸ்பிரிமென்ட்), ஐஎல்எஸ்ஏ (இன்ஸ்ட்ரூமென்ட் பார் லூனார் செய்ஸ்மிக் ஆக்டிவிட்டி), எல்ஆர்ஏ (லேசர் ரிடிரோரெப்ளக்டர் அர்ரே) ஆகும்.

அதில் ராம்பா நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய இருக்கிறது. நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால், பகலில் அதிக வெயிலும், இரவில் அதிக குளிரும் இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் ராம்பா கருவி ஆய்வு செய்யும். மேலும் இதை வைத்து நிலவின் வயது கணக்கீடு செய்யப்படும். அதன் பின் சேஸ்ட் கருவி நிலவில் உள்ள பாறை, கற்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும். ஐஎல்எஸ்ஏ கருவி, நிலவின் மேற்பரப்பில் நிலவும் அதிர்வுகளை ஆய்வு செய்யும். எல்ஆர்ஏ கருவி, நிலவின் சுழற்சியை ஆய்வு செய்யும். நிலவு பூமியை சுற்றி வரும் போது அதன் இயக்கம் குறித்தும், அதிர்வுகள் குறித்தும் ஆய்வு செய்யும்.

Share:

மாவட்ட கலெக்டரா, முதன்மை செயலரா? பள்ளிக்கல்வி இடமாறுதலில் பனிப்போர்..!!

மாவட்ட கலெக்டரா, முதன்மை செயலரா? பள்ளிக்கல்வி இடமாறுதலில் பனிப்போர்..!!

பள்ளிக்கல்வியில் சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில், மாவட்ட கலெக்டர்களா, அரசு செயலரா என்ற பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால், 10 நாட்களாக சி.இ.ஓ.,க்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில், சி.இ.ஓ., எனப்படும் வருவாய் மாவட்ட அளவிலான முதன்மை கல்வி அதிகாரிகளின் நியமனம் மற்றும் இடமாறுதலை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தான் மேற்கொள்வார். இந்த உத்தரவின்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும்,பணி நியமனங்களை பின்பற்றுவர்.

இதுவரை இல்லாத வகையில், தமிழக அரசில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவை, கலெக்டர்கள் பின்பற்றாமல், அதனை அலட்சியம் செய்யும் சம்பவம், 10 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

பள்ளிக்கல்விக்கும், கலெக்டர்களுக்கும் இடையே நடக்கும் இந்த பனிப்போர், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பம்

அதன் விபரம்:

கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை மாவட்ட சி.இ.ஓ., பதவிகளுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கடந்த, 11ம் தேதி, இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி, கோவை மாவட்ட சி.இ.ஓ., சுமதி பணி விடுவிப்பு பெற்று, புதிய இடமான ராணிப்பேட்டையில் பணியில் சேர சென்றார். ஆனால், திருப்பூருக்கு மாற்றப்பட்ட, ராணிப்பேட்டை சி.இ.ஓ., உஷா, ராணிப்பேட்டை பணியில் இருந்து விலகவில்லை.

இதனால், ராணிப்பேட்டை வந்த சுமதி, எங்கே பணியில் சேர்வது என தவித்தார். இந்த விவகாரம் அறிந்த, திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, தன் புதிய இடமான கோவைக்கு மாற தயங்கினார்.

சுமதி மீண்டும் கோவை மாவட்ட பணியில் சேரலாம் என, காத்திருந்தார். ஆனால், கோவைக்கு சுமதியும் அனுப்பப்படவில்லை. பாலமுரளியும் சேரவில்லை. அதனால், கோவைக்கு சி.இ.ஓ., இல்லாமல், கடந்த, 21ம் தேதி வரை, 10 நாட்களாக பிரச்னை நீடித்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி செயலகம் தரப்பில், தீர்வு காண முயற்சித்த போது, திருப்பூர் மாவட்டத்துக்கு, சி.இ.ஓ., உஷா வருவதை விட, வேறு யாரையாவது அனுப்புங்கள் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இடமாறுதல் உத்தரவில் திருத்தம் செய்து, கரூர் சி.இ.ஓ., கீதாவை திருப்பூருக்கும், கோவையில் இருந்து விலகிய சுமதியை, கரூருக்கும் மாற்றி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கடந்த, 21ம் தேதி புதிய உத்தரவிட்டார். இத்துடன் இந்த பிரச்னை முடியும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்தனர்

புதிய பிரச்னை

இதையடுத்து, பழைய உத்தரவின்படி, திருப்பூர் சி.இ.ஓ. பாலமுரளி, நேற்று முன்தினம் கோவையில் அவசரமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்ற பணியிடங்களுக்கும், சி.இ.ஓ,க்கள்


இடம் மாற முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால், அவர்கள் புதிய பணியிடத்தில் சேர முடியாமல், மீண்டும் ஒரு பிரச்னை கரூரில் துவங்கியது.

அதாவது, கரூர் சி.இ.ஓ., கீதா தன் இடமாறுதல் குறித்து, கலெக்டர் பிரபுசங்கருக்கு தகவல் அளித்துள்ளார். அதைக் கேட்ட, கலெக்டர் அவரை பணியில் இருந்து விலக அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது.

அதனால், கீதா கரூரில் இருந்து பணி விடுவிப்பு பெறவில்லை.

இந்நிலையில், ராணிப்பேட்டையில் திருப்பி அனுப்பப்பட்ட சுமதி, கரூரிலாவது பணியை துவங்கலாம் என, சென்றார்.

அங்கே கீதா பணி விலகாமல் நீடித்தார். இதனால், நேற்று இரவு வரை, சி.இ.ஓ. சுமதி கரூரில் பணியேற்கவில்லை. திருப்பூர் சி.இ.ஓ., பணியிடத்தில் கீதாவும் சேராமல், அந்த இடம் காலியாக உள்ளது.

நிர்வாக குளறுபடி?

சி.இ.ஓ., இடமாறுதல் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசின் முதன்மை செயலர் இடையிலான இந்த பனிப்போர், அரசு தரப்பிலும், பள்ளிக்கல்வி தரப்பிலும் சர்ச்சைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கலெக்டர்கள் பொதுவாக இணை செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

அவர்களுக்கு இரண்டு பணி நிலை உயர்வான, அரசின் முதன்மை செயலர் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றாமல் இருப்பது, தமிழக அரசின் நிர்வாக குளறுபடிகளை வெளிப்படையாக காட்டுவதாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது

Share:

பள்ளிக் கல்வித் துறையில் 10 நாட்களாக நீடித்த, சி.இ.ஓ., இடமாறுதல் பிரச்சனை!!!

பள்ளிக் கல்வித் துறையில் 10 நாட்களாக நீடித்த, சி.இ.ஓ., இடமாறுதல் பிரச்சனை!!!

பள்ளிக் கல்வித் துறையில், 10 நாட்களாக நீடித்த, சி.இ.ஓ., இடமாறுதல் பிரச்னையில், இறுதி தீர்வு காணப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்ல மறுத்த பெண் அதிகாரி, அங்கேயே தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களான, ஆறு சி.இ.ஓ.,க்களுக்கு இட மாறுதல் வழங்கி, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் புதிய இடங்களில் சேர, பணியாற்றிய இடங்களில் இருந்து, பணி விடுவிப்பு உத்தரவு பெற்றனர்.

கோவை சி.இ.ஓ., சுமதிக்கு, ராணிப்பேட்டைக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. அவருக்கு, கோவை மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பினர். அவரும் நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று, 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற பாடலை பாடி மகிழ்ந்தார்.

அந்த சூட்டோடு, ராணிப்பேட்டை சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பணியாற்றும் சி.இ.ஓ., உஷா, புதிய பணியிடமான திருப்பூருக்கு செல்ல மறுத்து விட்டார். அதையறிந்த திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, தன் புதிய பணியிடமான கோவைக்கு மாறுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், திருப்பூரிலேயே இருந்தார்.

இதன் காரணமாக, கோவை மாவட்டத்துக்கு, 10 நாட்களாக சி.இ.ஓ., இல்லாமல், அந்த இடம் காலியாக இருந்தது. இன்னொரு புறம், கோவையில் இருந்து ராணிப்பேட்டை வந்த சுமதி, அந்த மாவட்டத்தில் பணியில் சேர முடியுமா, முடியாதா என்பது தெரியாமல் தவித்தார்.

இந்த விவகாரம், கடந்த 10 நாட்களாக நீடித்ததை அடுத்து, பள்ளிக் கல்வி துறை செயலர் காகர்லா உஷா, நேற்று இரவு புதிய உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, 10 நாட்களாக இடமின்றி தவித்த சுமதி, கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் கீதா, திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், இடமாற்ற உத்தரவை ஏற்க மறுத்த உஷா, ராணிப்பேட்டையிலே தொடர்கிறார். இவர், 2020ல் கோவை மாவட்டத்தில் பணியாற்றியபோது, அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின், அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார்.

இந்த பிரச்னையால், அவர் மீண்டும் கொங்கு மண்டலத்துக்கு மாற விரும்பவில்லை என, கூறப்படுகிறது.

- தினமலர் நாளிதழ் செய்தி










Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support