Daily TN Study Materials & Question Papers,Educational News

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு – காவல்துறை அதிரடி!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு – காவல்துறை அதிரடி!



புத்தாண்டு பண்டிகையை ஒட்டி சென்னையில் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அதிரடி உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்:

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் விடிய விடிய இளைஞர்கள் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற கொண்டாட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னை காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், சென்னை நகர் முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும், 400 இடங்களில் வாகன தணிக்கைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் அருகிலோ அதற்கு மேலோ மேடை அமைக்க கூடாது. பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண் பாதுகாவலர்களையும் நியமிக்க வேண்டும். பைக் ரேஸ் போன்றவை நடைபெறுவதை தவிர்ப்பதற்கு 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support