தனியார் நிறுவனங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுங்க.. தமிழக அரசு அட்வைஸ்!

தனியார் நிறுவனங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுங்க.. தமிழக அரசு அட்வைஸ்!


மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடுக்கப்பட்டிருந்தது.

4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை

இந்த நிலையில், கனமழை தொடரும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதே வேளையில், பால் விநியோகம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தொய்வின்றி நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துக”

இதனிடையே,  நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பணியாளர்களை முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்ற    தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியமாக தேவைப்படும் பணியாளர்களை மட்டும் வரவழைத்து நிறுவனங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...