விஜயகாந்துக்கு திடீரென என்ன நடந்தது? மருத்துவமனை சொன்ன விளக்கம்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 1 மாத சிகிச்சைக்கு பிறகு இந்த மாதம் 12ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் என தேமுதிக அறிவித்திருந்த நிலையில், இன்று திடீரென அவரின் உடலில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிறுது நேரத்திலேயே அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் இன்று காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்த நிலையில், மேலும் இந்த நுரையீரல் அழற்சியால் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறிய விஜயகாந்த் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி சிறுது நேரத்திலேயே காலமானார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.