பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்க சூப்பர் திட்டம் – புதிய உத்தரவு!!

பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்க சூப்பர் திட்டம் – புதிய உத்தரவு!!


பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க மாநில அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புத்தக சுமை:

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கென ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை (DSERT) சார்பில் குழுவை அமைத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களின் பை எடை 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இருக்க வேண்டும் எனவும், 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 2 முதல் 3 கிலோ வரையிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 3 கிலோ முதல் 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 4 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இந்த அறிவிப்பை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...