கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

 கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழையால் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இத்தகைய சூழலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. தற்போது வரை சில இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

அதே நேரம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மழை மற்றும் புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் கடந்த டிச. 4 & 5ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 12 மற்றும் 13 ம் தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...