சென்னையில் அடுத்த மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்.!!

சென்னையில் அடுத்த மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்.!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 19-21 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளப்பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரும் சூழலில் இந்த மாவட்டங்களில் அடுத்து எப்பொழுது மழை பெய்யும் என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்…


இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...