ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா? – எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் பான் இணைப்பு
இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் அட்டையை பான் உடன் இணைக்க வேண்டும் என இந்திய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வருமான வரி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த முக்கியமான செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரை பான் உடன் இணைத்தால் தான் வரி செலுத்துதல்கள், டிடிஎஸ்/டிசிஎஸ் வரவுகள், வருமான அறிக்கைகள், வரையறுக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பரிவர்த்தனைகளை சரியாக செய்ய முடியும்.
உங்களுடைய ஆதார் அட்டையை, பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை தெரிந்து கொள்ள, முதலில் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in/iec/foportal/ என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதில் இணைப்பு ஆதார் நிலையை தேர்வு செய்ய வேண்டும். பின் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட வேண்டும். பின் ‘‘View Link Aadhaar Status’விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். திரையில் பான்-ஆதார் இணைப்பு நிலை காட்டும். உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், திரை “இணைக்கப்பட்டது” என காட்டும். இல்லை என்றால் அது அது இரண்டு கார்டுகளை இணைப்பதற்கான விவரங்களை காட்டும். அதன் மூலம் நீங்கள் இணைக்கலாம்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.