நாளை நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை? – பாதிக்கும் இயல்புநிலை!

 நாளை நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை? – பாதிக்கும் இயல்புநிலை!


வெள்ள பாதிப்புகளில் சிக்கியுள்ள நெல்லை நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த புதிய உத்தரவு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வந்தது. கனமழையின் எதிரொலியால் இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் மழை வெள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.


இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் கார்த்திகேயன் வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் மட்டும் செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...