பொதுத்தேர்வு தேதியினை மாற்ற ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை..!

பொதுத்தேர்வு தேதியினை மாற்ற ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை..!


பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு 1.4.2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கு முந்தின நாள் கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாட கூடிய புனித வெள்ளி ஈஸ்டர் திருநாள் வருகிறது.

ஆகவே அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களை கணித தேர்வுக்கு தயார் செய்வதில் , பள்ளிக்கு வரச்செய்து பயிற்சி அளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆகவே 1.4.24 அன்று அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட தங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம் 

29.3.23 good Friday govt holiday 

30.3.23 Saturday 

31.3.23 Easter Sunday 

1.4.23 Maths exam 

 Dr.P . பேட்ரிக் ரெய்மாண்ட் 

 பொதுச்செயலாளர் 

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு 


Post a Comment

0 Comments