School Morning Prayer Activities - 01.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2022


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பெருமை

குறள் : 973

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

பொருள்:

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்

பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.

விட்டு கொடுங்கள்.

இல்லை விட்டு விடுங்கள்.

- புத்தர்

பொது அறிவு :

1.கோடைகாலத்தில் சாலைகளில் கானல் நீர் தோன்ற காரணம் : 

ஒளி பிரதிபலிப்பு.

 2. பிளாஸ்டிக் தொழிலில் பயன்படும் பிவிசி என்னும் சொல் எதைக் குறிக்கும்? 

பாலிவினைல் குளோரைடு.

English words & meanings :

nascent - just coming into existence. Adjective. புதிதாக உருவாகிய, பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். கல்லீரல் பலம் பெறும்.

NMMS Q 15:

ஒருநாளில் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிட முட்கள் ஒன்று சேரும் நேரங்களின் எண்ணிக்கை? 

விடை: 24

ஜூலை 1 - இன்று

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.


வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.

கல்பானா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்

கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.


இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.


அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.


இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.



மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.


இன்றைய செய்திகள் - 01.07.22

◆குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி.

◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்குகடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதேபோல் தேவனேரி முதல் பூஞ்சேரி வரை தமிழக பாரம்பரிய சின்னங்களை விளக்கும் சாலையோர சுவரோவியங்கள் வரையப்படவுள்ளன.

◆சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் - ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு.

◆தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

◆கோ-லொக்கேஷன் வழக்கு: என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் - ‘செபி’ நடவடிக்கை.

◆பிலிப்பைன்ஸ்: நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளரின் செய்தி நிறுவனத்தை மூட அரசு உத்தரவு.

◆இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று: காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சி பாதிப்பு.

◆விம்பிள்டன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.


Today's Headlines

◆Group-1 Main Exam Results Released: 137 Candidates Qualified for Interview.

 ◆East coast road repair work has started for the International Chess Olympiad to be held in Mamallapuram.  Similarly, roadside murals depicting the traditional symbols of Tamil Nadu will be drawn from Devaneri to Pooncherry.

 ◆The Government of Tamil Nadu has allocated Rs.7.32 crores for the initiation of 3 new schemes for the welfare of children under the Department of Social Welfare.

 ◆Central Cabinet approves computerization of Primary Agricultural Credit Unions.

 ◆Co-location case: Rs 7 crore to NSE;  Chitra Ramakrishna fined Rs 5 crore - 'SEBI' action.

 ◆Philippines: Government orders closure of Nobel Prize-winning journalist's news agency.

 ◆Coronavirus infection among Indian hockey players: Training for Commonwealth Games affected.

 ◆Wimbledon Tennis;  Djokovic advanced to the 3rd round.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் -  பள்ளிக்கல்வித்துறை

2022-2023ம் கல்வி ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற வகுப்புகளுக்கு சேர்க்கை பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது கொரோனா படம் பெற்று அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து பள்ளிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அனுப்பி இதை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் பின்வருமாறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோவிட் 19 பெருந்தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால் மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களில் நுழையும்போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் அவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அவருக்கு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாய முக கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் Soap, Hand Wash முதலியவை இருப்பதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

வகுப்பறைக்குள் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே சுகாதாரத் துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

Share:

10th Tamil Guide Unit 3.2 காசிக்காண்டம்

10th Tamil Guide Unit 3.2

இயல் 3.2 காசிக்காண்டம்

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,

நும்இல் போல நில்லாது புக்கு,

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

அடி : 158 –169

சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி,
  • கடும்பு – சுற்றம்,
  • ஆரி – அருமை,
  • வயிரியம் – கூத்தர்,
  • இறடி – தினை,
  • அல்கி – தங்கி
  • நரலும் – ஒலிக்கும்
  • படுகர் – பள்ளம்
  • வேவை – வெந்தது
  • பொம்மல் – சோறு

பாடலின் பொருள்

நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

II. பகுபத உறுப்பிலக்கணம்

1.  மலைந்து = மலை + த் (ந்) + த் + உ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • அசைஇ – சொல்லிசை அளபெடை
  • கெழீஇ – சொல்லிசை அளபெடை
  • பரூஉக் – செய்யுளிசை அளபெடை
  • குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடை

IV. பலவுள் தெரிக.

1.“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

V. குறு வினா

1.இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

  • தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.

VI. சிறு வினா

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

  • திணை      -        கிடைக்கும் உணவுப் பொருட்கள்
  • முல்லை     -        வரகு, சாமை
  • மருதம்        -     செந்நெல், வெண்ணெல்

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.

வழிகாட்டல்:-

  • பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.

நன்னின் கூத்தர்கள்:-

  • பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள்:-

  • நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு:-

  • நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

VII. நெடு வினா

1.ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச்சட்டம்

  • முன்னுரை
  • உணவு
  • கல்வி
  • தொழில்
  • நன்னடை
  • முடிவுரை

முன்னுரை:-

அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:-

அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:-

கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:-

இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.

நன்னடை:-

சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:-

வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

மலைபடுகடாம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மலைபடுகடாம் ______________ நூல்களுள் ஒன்று.

விடை : பத்துபாட்டு

2. மலைபடுகடாம் நூலை ______________  எனவும் அழைக்கின்றனர்.

விடை : கூத்தராற்றுப்படை

3. நன்னன் என்னும் குறுநில மன்னன் மலைபடுகடாம் நூலின் ______________  ஆவான்.

விடை : பாட்டுடைத் தலைவன்

4. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் ______________ மலைபடுகடாம் நூலை பாடியுள்ளார்.

விடை : பெருங்கெளசிகனார்

5. நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்றவர் ______________ 

விடை : கூத்தர்

II. குறு வினா

1. ஆற்றுப்படை என்றால் என்ன?

ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்ற வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.

2. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

3. நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் யாவை?

நெய்யில் வெந்த மாசித்தின் பொரியல்

தினைச் சோறு

4. மலைபடுகடாம் குறிப்பு வரைக

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

583 அடிகளை கொண்டது.

கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.

மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) அசைஇ – 1. சுற்றம்

ii) அல்கி – 2. கன்றின் நெருப்பு

iii) கன்று எரி – 3. இளைப்பாறி

iv) கடும்பு – 4. தங்கி

அ) 3, 4, 2, 1

ஆ) 2, 1, 3, 4

இ) 1, 2, 3, 4,

ஈ) 1, 4, 3, 2

Answer:

அ) 3, 4, 2, 1

 

2.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) ஆரி – 1. பள்ள ம்

ii) நரலும் – 2. கூத்தர்

ii) படுகர் – 3. அருமை

iv) வயிரியம் – 4. ஒலிக்கும்

அ) 2, 1, 4, 3

ஆ) 3, 4, 1, 2

இ) 3, 1, 4, 2

ஈ) 2, 4, 1, 3

Answer:

ஆ) 3, 4, 1, 2

 

3.பொருந்தாத பொருளுக்கான இணை எது?

அ) வேவை – வெந்தது

ஆ) இறடி – தினை

இ) பொம்மல் – சோறு

ஈ) நரலும் – சுற்றம்

Answer:

ஈ) நரலும் – சுற்றம்

 

4.மலைபடுகடாம் எந்த நூல்களுள் ஒன்று?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) நீதி

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

Answer:

ஆ) பத்துப்பாட்டு

 

5.மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்?

அ) 483

ஆ) 543

இ) 583

ஈ) 643

Answer:

இ) 583

 

6.மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) விறலியாற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

ஈ) கூத்தராற்றுப்படை

 

7.மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது

அ) யானை

ஆ) மேகம்

இ) மான்

ஈ) வானம்

Answer:

அ) யானை

 

8.இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர்

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) பெருங்கௌசிகனார்

இ) மருதனார்

ஈ) நக்கீரர்

Answer:

ஆ) பெருங்கௌசிகனார்

 

9.‘மலைந்து’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை

அ) மலைந்து+உ

ஆ) மலைந்+த்+உ

இ) மலை +த்(ந்)+த்+உ

ஈ) மலை +த்+த்+உ

Answer:

இ) மலை +த்(ந்)+த்+உ

 

10.‘பொழிந்த’ – என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை

அ) பொழிந்து+அ)

ஆ) பொழி+த்+த்+உ

இ) பொழி+த்+ந்+த்+அ

ஈ) பொழி+த்(ந்)+த்+அ

Answer:

ஈ) பொழி+த்(ந்)+த்+அ

 

11.பொருந்தாததைக் கண்டறிக.

அ) திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

ஆ) சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்

இ) பொருநராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்

ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

Answer:

ஈ) மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ண னார்

 

12.அன்று அவண் அசைஇ – என்பதில் ‘அசைஇ’ என்பதன் பொருள்

அ) அசைவாடிய

ஆ) இளைப்பாறி

இ) அமைதியாகி

ஈ) இன்பமாகி

Answer:

ஆ) இளைப்பாறி

 

13.கன்று எரி – என்பதில் ‘எரி’ எனக் குறிப்பிடப்படுவது

அ) நெருப்பு

ஆ) கொம்பு

இ) வால்

ஈ) நீர்

Answer:

அ) நெருப்பு

 

14.அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?

அ) கரும்

ஆ) சிவந்த

இ) வெண்மையான

ஈ) நீலநிற

Answer:

ஆ) சிவந்த

 

15.அல்கி என்பதன் பொருள்

அ) அழிந்து

ஆ) தங்கி

இ) உள்ளே

ஈ) வெளியே

Answer:

ஆ) தங்கி

 

16.பொருத்துக.

1. இறடி – அ) தங்கி

2. அல்கி – ஆ) பள்ளம்

3. படுகர் – இ) வெந்து

4. வேவை – ஈ) தினை

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ)

 

17.கூத்தராற்றுப்படை என்றழைக்கப்படும் நூல்

அ) திருமுருகாற்றுப்படை

ஆ) மலைபடுகடாம்

இ) பொருநராற்றுப்படை

ஈ) சிறுபாணாற்றுப்படை

Answer:

ஆ) மலைபடுகடாம்

 

18.நன்னன் எந்நில மன்னன்?

அ) பெருநில

ஆ) குறுநில

இ) சிறுநில

ஈ) மா

Answer:

ஆ) குறுநில

 

19.மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்

அ) நன்ன ன்

ஆ) பாரி

இ) கபிலர்

ஈ) பெருங்கௌசிகனார்

Answer:

அ) நன்னன்

Share:

10th Tamil Guide Unit 3.1 விருந்து போற்றுதும்!

10th Tamil Guide Unit 3.1

 Unit 3.1 விருந்து போற்றுதும்!

I. பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து
  2. இன்மையிலும் விருந்து
  3. அல்லிலும் விருந்து
  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

II. குறு வினா

1.‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

  • விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருத முடியாது.
  • ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை ஏற்கமாட்டார்கள். எனேவ, செல்வத்தை விட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

III. சிறு வினா

  • • புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
  • • திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.
  • இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தல் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினராகப் போற்ப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

IV. நெடு வினா

1.உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • இனிது வரவேற்றல்
  • உணவு உபசரிப்பு
  • அன்பு வெளிப்பாடு
  • முடிவுரை

முன்னுரை

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வாத் தவர்க்கு”

என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல்:-

வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முக மலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

உணவு உபசரிப்பு:-

வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்

தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.

உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான் பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.

வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன். வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.

உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு:-

ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்ட அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.

பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.

உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கும் சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தேன்.

முடிவுரை:-

விருந்தினர் பேணுதன் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும், அருளோடும் செய்தல் நனி சிறப்பாகும்.

 கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் பண்பாட்டில் ____________ க்குத் தனித்த இடமுண்டு.

விடை : வாழை இலை

2. அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் ____________ வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

விடை : வாழையிலை விருந்து விழா

3. திருவள்ளுவர் ____________ ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.

விடை : இல்லறவியலில்

4. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி ____________ குறிப்பிடுகிறது.

விடை : பெரியுராணம்

5. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் ____________

விடை :  திருக்குறள்

6. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ____________ பண்பின் அடிப்படை

விடை : விருந்தோம்பல்

7. விருந்தோம்பல் என்பது ____________

விடை : பெண்களின் சிறந்த பண்பு

II. குறு வினா

1. விருந்தோம்பல் என்றால் என்ன?

  • தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவை விருந்தோம்பல் எனப்படும்.

2. உலகம் நிலைத்திருப்தற்கான காரணங்கள் எவையென கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டவை எவை?

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
  • அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலத்திருக்கிறது.

3. உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு என்பதை குறித்த நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகப் கருதப்படுகிறது.
  • நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு.

4. இல்ல விழாக்கள் யாவை?

  • திருமணத்தை உறுதி செய்தல்
  • திருமண்
  • வளைகாப்பு
  • பிறந்த நாள்
  • புதுமனை புகுவிழா

5. மினசோட்டா தமிழ்ச் சங்க வாழையிலை விருந்து விழாவில் வைக்கப்படும் உணவுகள் யாவை?

  • முருங்கைக்காய் சாம்பார்
  • வெண்டக்காய் கூட்டு
  • மோர்க்குழம்பு
  • வேப்பம்பூ ரசம்
  • தினைப்பாயாசம்
  • அப்பளம்

6. விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் யாவை?

  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
  • கம்பராமாயணம்
  • கலிங்கத்துப்பரணி
  • புறநானூறு
  • நற்றிணை
  • குறுந்தொகை
  • கொன்றைவேந்தன்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.

i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்

ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்

iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்

iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்

அ) 1, 2, 3, 4

ஆ) 4, 3, 2, 1

இ) 4, 3, 1, 2

ஈ) 3, 4, 2, 1

Answer:

ஈ) 3, 4, 2, 1

2.மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?

அ) அமெரிக்கா

ஆ) இலங்கை

இ) மொரிசியஸ்

ஈ) மலேசியா

Answer:

அ) அமெரிக்கா

3.தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?

அ) தொன்மை

ஆ) புதுமை

இ) இளமை

ஈ) முதுமை

Answer:

ஆ) புதுமை

4.“………தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?

அ) கம்பராமாயணம், சீதை

ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி

இ) நளவெண்பா , தமயந்தி

ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை

Answer:

ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி

5.“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?

அ) கம்பராமாயணம்

ஆ) பெரிய புராணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) மணிமேகலை

Answer:

அ) கம்பராமாயணம்

6.“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை

ஆ) அகநானூறு

இ) நற்றிணை

ஈ) புறநானூறு

Answer:

இ) நற்றிணை

7.‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

அ) சிறுபாணாற்றுப்படை

ஆ) பெரும்பாணாற்றுப்படை

இ) பொருநராற்றுப்படை

ஈ) கூத்தராற்றுப்படை

Answer:

இ) பொருநராற்றுப்படை

8.“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?

அ) கம்பராமாயணம்

ஆ) கலிங்கத்துப்பரணி

இ) முக்கூடற்பள்ளு

ஈ) பெரியபுராணம்

Answer:

ஆ) கலிங்கத்துப்பரணி

9.“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?

அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.

இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

10.தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?

அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்

இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்

ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

Answer:

அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

11.அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?

அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்

ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்

இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி

ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை

Answer:

ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்

12.நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?

அ) குழல் மீன் கறியும் பிறவும்

ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்

இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்

Answer:

அ) குழல் மீன் கறியும் பிறவும்

13.“இலையை மடிப்பதற்கு முந்தைய

வினாடிக்கு முன்பாக

மறுக்க மறுக்க

பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்

நீண்டு கொண்டிருந்தது

பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?

அ) அம்சப்பிரியா

ஆ) பா.விஜய்

இ) சிநேகன்

ஈ) நா. முத்துக்குமார்

Answer:

அ) அம்சப்பிரியா

14.“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) பரிபாடல்

Answer:

ஆ) குறுந்தொகை

15.“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) ஔவையார், ஆத்திச்சூடி

ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்

ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்

Answer:

ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

16.அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

அ) வாழையிலை விருந்து விழா

ஆ) இறைச்சி உணவு விருந்து விழா

இ) வேட்டி சேலை உடுத்தும் விழா

ஈ) நவதானிய விழா

Answer:

அ) வாழையிலை விருந்து விழா

17.திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்

அ) இல்லறவியல்

ஆ) பாயிரவியல்

இ) அரசியல்

ஈ) துறவறவியல்

Answer:

அ) இல்லறவியல்

18.விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) செயங்கொண்டார்

Answer:

இ) இளங்கோவடிகள்

19.கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்

அ) கம்பர்

ஆ) தொல்காப்பியர்

இ) இளங்கோவடிகள்

ஈ) செயங்கொண்டார்

Answer:

அ) கம்பர்

20.இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?

அ) பெரிய புராணம்

ஆ) நற்றிணை

இ) பொருநராற்றுப் படை

ஈ) கம்பராமாயணம்

Answer:

அ) பெரிய புராணம்

Share:

பள்ளி பணி நாட்கள் பட்டியல் , பருவத் தேர்வுகள் விவரம் , அரசு விடுமுறை நாட்கள் , சனிக்கிழமை குறை தீர் நாட்கள் விவரம் , CRC நாட்கள்

பள்ளி பணி நாட்கள் பட்டியல் , பருவத் தேர்வுகள் விவரம் , அரசு விடுமுறை நாட்கள் , சனிக்கிழமை குறை தீர் நாட்கள் விவரம் ,  CRC நாட்கள்

பள்ளி பணி நாட்கள் 

Download Here PDF format File 




Share:

STUDENT EMIS ENROLL FORM

Share:

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
2,381 அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் - அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவா் சோ்க்கையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு பள்ளியிலும் பழைய முறையில் இருந்தபடி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இதற்கான சிறப்பாசிரியா்களை நியமிப்பதற்கான தோ்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பள்ளிகளில் இப்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிா்த்து வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. இப்போது இருக்கிற கட்டுப்பாடுகள் இருந்தால் போதுமானது. பள்ளிகளில் 12 வயதுக்கும் அதிகமான மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகள் கழித்து புதிதாகப் பள்ளிகளைத் திறக்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. நிகழாண்டிலிருந்துதான் முழுமையாக பள்ளிக்கூடங்களைத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு செப்டம்பரில் சில வகுப்புகளும், நவம்பரில் சில வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவிகளும் வந்து சோ்வதற்குள் மீண்டும் ஜனவரி மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ் கல்வியாண்டில் எப்போதும்போல வகுப்புகள் நடைபெறுவதால், பாடங்கள், தோ்வுகள் முழுமையாக நடத்தப்படும். எனவே, இனிமேல் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே குழந்தைகளை மதிப்பிடக் கூடாது. இதற்காகவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதையும் மீறி 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். இந்த மாதிரியான மனநிலையில் யாரும் இருக்க வேண்டாம் என்றாா் அமைச்சா்.

Share:

3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - இன்று அறிவிப்பு

இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது.

3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30-06-2022 school Morning prayer activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2022 Morning prayer activities



Tn Schools Morning Prayer Activities

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பெருமை

குறள் : 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்:

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

பழமொழி :

If all wish to command who is to obey?

எல்லோரும் பல்லக்கில் உட்கார்ந்தால் பல்லக்குத் தூக்குவது யார்?

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

வாழ்க்கையின் நோக்கம்

பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

- புத்தர்

பொது அறிவு :

1.மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் வைட்டமின் எது? 

வைட்டமின் ஈ.

2. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் எது? 

குரோமேடோபேர்.

English words & meanings :

minced - cut up into very small pieces, Adjective. மிக சிறிய துண்டுகளாக வெட்டுதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

வெப்பம் அதிகம் ஏற்பட்டால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். மேலும் முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

NMMS Q 14:

A என்பவர் B என்பவரின் சகோதரன். ஆனால் B என்பவர் A என்பவரின் சகோதரன் அல்ல எனில் A மற்றும் B ஆகியோரின் உறவுமுறை என்ன? 

விடை: A - சகோதரன் ; B - சகோதரி

ஜூன் 30 - இன்று

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை

ஜூடோ பயிற்சி

சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். 

தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். 

ஒரு நாள் சிறுவன் குருவைக்கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் நீங்கள் நினைத்ததுசரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும். 

எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான். 

குரு சொன்னார்: இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. 

குருவுக்கு ஆத்மார்த்தமாகநன்றி சொன்னான் சிறுவன்.


இன்றைய செய்திகள் - 30.06.22

◆பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

◆ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

◆மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

◆நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.

◆பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் நேற்று தொடக்கம்.

◆ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன.

◆மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

◆தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி: ஜூலை 5-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

◆அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றிபெற்றது.

Today's Headlines

◆The Government of Tamil Nadu has decided to amend the Motor Vehicle Act to make CCTV and sensors mandatory in school vehicles.

 ◆The Government of Tamil Nadu has allocated Rs. 4.75 crore for conducting intensive awareness campaigns in 19 districts to prevent anemia.

 ◆The final results of the 2021 Indian Forest Service Examination conducted by the Central Civil Service Commission were released yesterday.  A total of 108 students across the country have passed the exam.

 ◆The Central Groundwater Authority has announced that stern action will be taken if all those who use underground water if not register by tomorrow (June 30).

 ◆PSLV-C53 rocket launches today - Countdown begins yesterday.

 ◆At the G7 summit in Germany, countries including the United States and India pledged to protect freedom of expression.

 ◆Malaysia Open Badminton: India's PV Sindhu advances to the next round.

 ◆National Youth Boxing Tournament will be held on 5th July in Chennai.

◆ India won the 2nd Twenty20 cricket match against Ireland by 4 runs.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

10th Tamil Guide Unit 2.5 | தொகைநிலைத் தொடர்கள்

10th Tamil Guide Unit 2.5
2.5. தொகைநிலைத் தொடர்கள்

I. பலவுள் தெரிக

‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • அன்மொழித்தொகை
  • உம்மைத்தொகை

விடை : பண்புத்தொகை

II. குறு வினா

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க

  • தண்ணீர் குடி
  • தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.
  • தயிர்க்குடம்
  • தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
  • கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

II. சிறு வினா

தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

மல்லிகைப்பூ:-

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்பு பெயர், பூ – பொதுப்பெயர்)

பூங்கொடி:-

உவமைத் தொகை

பூ போன்ற கொடி

தண்ணீர்த் தொட்டியில்;-

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

தண்ணீரை ஊற்றும் தொட்டி

குடிநீர் நிரப்பினாள்;-

இரண்டாம் வேற்றுமைத் தொகை

குடிநீரை நிரப்பினாள்

  கூடுதல் வினாக்கள்

1. சொற்றொடர் என்றால் என்ன?

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது “சொற்றொடர்” அல்லது “தொடர்” எனப்படும்.

எ.கா.:- நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.

2. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.

எ.கா.:- கரும்பு தின்றான்.

3. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்.?

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

அவை

  • வேற்றுமைத்தொகை
  • வினைத்தொகை,
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை ,
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை என்பன ஆகும்.

4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவ ற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

5. பண்புத்தொகை என்றால் என்ன?

நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் “மை” என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

6. இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ’ஆகிய’ என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

7. உவமைத்தொகை என்றால் என்ன? எ.கா. தருக.

உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

எ.கா.:- மலர்க்கை (மலர் போன்ற கை)

8. உம்மைத்தொகை என்றால் என்ன?

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ’உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.

9. உம்மைத்தொகை என்றால் என்ன?

உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப்

பெயர்களைத் தொடர்ந்து வரும்.

10. அன்மொழித்தொகை என்றால் என்ன?

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

கற்பவை கற்றபின்

வண்ணமிட்ட தொகைச் சொற்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன் திறன்பேசியின் தாெடுதிரையில் படித்துக் காெண்டிருந்தார்.

அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத்தொகை

தாெடுதிரை – வினைத்தொகை

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் காெடுக்கவும்.

மோர்ப்பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

மோர் காெடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

3. வெண்டக்காய்ப் பாெரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

வெண்டக்காய்ப் – இருபெயரொட்டு பண்புத்தொகை

மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

4. தங்கமீன்கள் தண்ணீர்த் தாெட்டியில் விளையாடுகின்றன.

தங்கமீன்கள் – உவமைத்தொகை

தண்ணீர்த் தாெட்டி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

I. தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயற்கை

பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக் கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்த இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.

II. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்)

1. இன்சொல் – பண்புத்தொகை

இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு

2. எழுகதிர் – வினைத்தொகை

கடலின் நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு

3. கீரிபாம்பு – உம்மைத்தொகை

பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்

4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை

பூப் போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்

5. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை

பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர்

6. முத்துப் பல் – உவமைத் தொகை

வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது

III. செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர்.மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்

– கோவை.இளஞ்சேரன்

1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

மலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

பாதிரிப்பூ – குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். உடல் நலத்தை பெருக்கி குளிர்ச்சியூட்டும்

முருங்கைப்பூ – இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரிழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவாற்றல் பெருகும்

4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.

அரிய மலர் – பெயரச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்

விடை –

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்

மொழியோடு விளையாடு

I. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

(காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்

2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்

புதுமை

3. இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்

விண்மீன்

5. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்

காடு

II. நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

காற்றின் பாடல்

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

மொட்டின் வருணனை

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

மிதக்கும் வாசம்

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

உயர்ப்பின் ஏக்கம்

5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

நீரின் சிலிப்பு

6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.

வனத்தின் நடனம்

III. அகராதியில் காண்க.

1. அகன்சுடர்

சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்

2. ஆர்கலி

கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்

3. கட்புள்

பறைவ, ஒரு புலவன்

4. கொடுவாய்

புலி, வளைந்த வாய், பழிச்சொல்

5. திருவில்

வானவில், இந்திரவில்

கலைச்சொல் அறிவாேம்

  • Storm – புயல்
  • Land Breeze – நிலக்காற்று
  • Tornado – சூறாவளி
  • Sea Breeze – கடற்காற்று
  • Tempest – பெருங்காற்று
  • Whirlwind – சுழல்காற்று

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

ஈ) ஆறு

2.கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?

அ) தேர்ப்பாகன்

ஆ) அண்ண ன் தம்பி

இ) வெற்றிலை பாக்கு

ஈ) இரவு பகல்

Answer:

அ) தேர்ப்பாகன்

3.‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?

அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை

ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை

ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை

Answer:

ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

4.பொருத்துக.

1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை

2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை

3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ

இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ

ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ

Answer:

அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

5.பொருத்துக.

1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்

2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை

3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி

4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி

அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ

ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ

Answer:

அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ

6.பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்

ஆ) வட்டத்தொட்டி

இ) இன்மொழி

ஈ) கொல்களிறு

Answer:

ஈ) கொல்களிறு

7.காலம் கரந்த பெயரெச்சம்

அ) வினைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை

Answer:

அ) வினைத்தொகை

8.வேற்றுமையுருபு அல்லாதது

அ) ஐ, ஒடு

ஆ) கு, இன்

இ) ஆகிய, ஆன

ஈ) அது, கண்

Answer:

இ) ஆகிய, ஆன

9.பொருந்தாத இணையைக் கண்டறிக

அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்

ஆ) பண்புத்தொகை – இன்மொழி

இ) உம்மைத்தொகை – தாய் சேய்

ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்

Answer:

அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்

10.‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..

அ) உவம உருபு – உவமை – உவமேயம்

ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்

இ) உவமேயம் – உவமை – உவம உருபு

ஈ) இவற்றுள் ஏதுமில்லை

Answer:

ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்

11.சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

ஈ) உம்மைத்தொகை

Answer:

இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

12.மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?

அ) மார்கழி, சாரை

ஆ) திங்கள், பாம்பு

இ) மார்கழி, பாம்பு

ஈ) திங்கள், சாரை

Answer:

ஆ) திங்கள், பாம்பு

13.‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு

அ) ஆன

ஆ) ஆகிய

இ) போன்ற

ஈ) ஐ

Answer:

ஆ) ஆகிய

14.‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு

அ) ஆன

ஆ) ஆகிய

இ) போன்ற

ஈ) இன்

Answer:

அ) ஆன

15.‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு

அ) கு

ஆ) கண்

இ) ஆல்

ஈ) அது

Answer:

அ) கு

16.கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.

அ) இரண்டாம்

ஆ) மூன்றாம்

இ) நான்காம்

ஈ) ஆறாம்

Answer:

அ) இரண்டாம்

17.நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்

அ) தேர்ப்பாகன்

ஆ) தமிழ்த்தொண்டு

இ) கரும்பு தின்றான்

ஈ) மதுரை சென்றார்

Answer:

ஆ) தமிழ்த்தொண்டு

18.பொருத்திக் காட்டுக.

i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை

ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை

iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை

iv) தாய்சேய் – 4. வினைத்தொகை

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 4, 2, 1, 3

ஈ) 2, 3, 4, 1

Answer:

அ) 4, 3, 2, 1

19.இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்

அ) மலர்க்கை

ஆ) அண்ண ன் தம்பி

இ) மார்கழித்திங்கள்

ஈ) தேர்ப்பாகன்

Answer:

இ) மார்கழித்திங்கள்

20.பொருத்துக.

i) இன்மொழி – 1. உவமைத்தொகை

ii) தாய்சேய் – 2. வினைத்தொகை

iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை

iv) வருபுனல் – 4. பண்புத்தொகை

அ) 1, 2, 3, 4

ஆ) 3, 4, 2, 1

இ) 4, 3, 2, 1

ஈ) 4, 3, 1, 2

Answer:

ஈ) 4, 3, 1, 2

Share:

10th Tamil Guide Unit 3.2 இயல் 3.2 காசிக்காண்டம்

10th Tamil Guide Unit 3.2
இயல் 3.2 காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

    போமெனில் பின் செல்வதாதல் 

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே *

    இல்லொழுக்கம், (பா எண் : 17)

சொல்லும் பொருளும்

  •  அருகுற – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

பாடலின் பொருள் 

விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், ‘வீட்டிற்குள் வருக! என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

 I. சொல்லும் பொருளும்

  • அருகுறை – அருகில்
  • முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

II. பகுபத உறுப்பிலக்கணம்

 1.  உரைத்த – உரை + த் + த் +அ 

உரை – பகுதி

த் – சந்தி

த் – இறந்த கால இடைநிலை

அ – பெயரச்ச விகுதி

2. வருக – வா(வரு) + க 

வா – பகுதி

வரு – எனக் குறுகியத விகாரம்

க – வியங்கோள் வினைமுற்று விகுதி

III. இலக்கணக் குறிப்பு

  • நன்மொழி – பண்புத்தொகை
  • வியத்தல் – தொழிற்பெயர்
  • நோக்கம் – தொழிற்பெயர்
  • எழுதுதல் – தொழிற்பெயர்
  • உரைத்தல் – தொழிற்பெயர்
  • செப்பல் – தொழிற்பெயர்
  • இருத்தல் – தொழிற்பெயர்
  • வழங்கல் – தொழிற்பெயர்

IV. பலவுள் தெரிக.

காசிக்காண்டம் என்பது

1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை : காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

V. குறு வினா

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காசி நகரத்தின் பெருமைகளை கூறும் நூல் ____________ ஆகும்.

விடை :காசிக்காண்டம்

2. ____________ என்று அழைக்கப்படுபவர் அதிவீரராம பாண்டியர் ஆவார்

விடை : சீவலமாறன்

\3. ____________ சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.

விடை : நறுந்தொகை

4. அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர் ____________

விடை : சீவலமாறன்

5. ____________ என்னும் நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர்.

விடை : வெற்றிவேற்கை

II. குறு வினா

1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் எது?

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்

 2. காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்கண்டம்
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ளது

3. அதிவீராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?

  • காசிக்காண்டம்
  • நைடதம்
  • லிங்கபுராணம்
  • வாயுசம்கிதை
  • திருக்கருவை அந்தாதி
  • கூர்மபுராணம்
  • வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை

 4. முகமன் என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?

ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

III. சிறு வினா

1. அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக

  • முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
  • தமிழ்ப் புலவராக திகழ்ந்த இவர் இயற்றி நூல் காசிக்காண்டம்
  • இவர் இயற்றிய வெற்றி வேற்கை என்றழைக்கப்டும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • இவரின் பட்டப்பெயர்  சீவலமாறன்.
  • காசிக்காண்டம், நைடதம், லிங்கபுராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை ஆகியவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

2. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, “வீட்டிற்குள் வருக” என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியகா முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும்
  • மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்ககமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பலவுள் தெரிக

1.காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?

அ) துளசிதாசர்

ஆ) அதிவீரராம பாண்டியர்

இ) ஔவையார்

ஈ) பெருஞ்சித்திரனார்

Answer:

ஆ) அதிவீரராம பாண்டியர்

2.காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?

அ) பதினான்காவது

ஆ) பதினாறாவது

இ) பதின்மூன்றாவது

ஈ) பதினேழாவது

Answer:

ஈ) பதினேழாவது

3.முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கிள்ளிவளவன்

இ) செங்குட்டுவன்

ஈ) இரண்டாம் புலிகேசி

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

4.அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்

அ) சீவலபேரி பாண்டி

ஆ) சீவலமாறன்

இ) மாறவர்மன்

ஈ) மாறன்வழுதி

Answer:

ஆ) சீவலமாறன்

5.அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.

அ) நைடதம்

ஆ) வாயு சம்கிதை

இ) திருக்கருவை அந்தாதி

ஈ) சடகோபர் அந்தாதி

Answer:

ஈ) சடகோபர் அந்தாதி

6 .‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?

அ) அருகில்

ஆ) தொலைவில்

இ) அழிவில்

ஈ) அழுகிய

Answer:

அ) அருகில்

7 .முகமன் எனப்படுவது ……………………

அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்

இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்

ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்

Answer:

அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

8 .விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?

அ) எட்டு

ஆ) ஒன்பது

இ) ஆறு

ஈ) பத்து

Answer:

ஆ) ஒன்பது

9 .வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கரிகாலன்

இ) பாரி

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

10 .நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

அ) அதிவீரராம பாண்டியர்

ஆ) கரிகாலன்

இ) பாரி

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Answer:

அ) அதிவீரராம பாண்டியர்

11 .நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) கொன்றைவேந்தன்

ஆ) காசிக்கலம்பகம்

இ) வெற்றிவேற்கை

ஈ) காசிக்காண்டம்

Answer:

இ) வெற்றிவேற்கை

Share:

அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு!

அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு!

ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தபோதும், பொது தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்து பட்டியல் தயாரிக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு!
அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு!


தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் இந்தாண்டு மார்ச்சில் நடந்தன. இந்த தேர்வின் முடிவுகள், இந்த மாதம், 20, 27ம் தேதிகளில் வெளியிடப்பட்டன.

இடைநிற்றல்

தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விபரப்படி, அரசு பள்ளிகளை பின்னுக்கு தள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறாமல் இடைநிற்றலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்காக, தமிழக அரசின் பட்ஜெட்டில், ஆண்டுக்கு 35 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடுகிறது. மூன்றரை லட்சம் ஆசிரியர்கள், அரசிடம் ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர். அலுவலக பணியாளர்களும், ஆய்வக உதவியாளர்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள், இவர்களுக்கெல்லாம் தலைமையாக பள்ளிக் கல்வி அமைச்சர் என, மிகப்பெரிய நிர்வாக முறை செயல்படுகிறது.

அதிர்ச்சி

ஆனால், தனியார் பள்ளிகளில் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என, சிறிய நிர்வாக முறையே உள்ளது. இந்த சிறிய நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிக தேர்ச்சியும் பெறுகின்றனர்.ஆனால், மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெறுவது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்தும், மாணவர்களின் மதிப்பெண்கள் சரிந்தது குறித்தும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக, தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளின் பட்டியலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்க,முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

Share:

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் எப்போது? அதிகாரிகள் விளக்கம்!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் எப்போது? அதிகாரிகள் விளக்கம்!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் எப்போது? அதிகாரிகள் விளக்கம்!
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் எப்போது? அதிகாரிகள் விளக்கம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலவச சைக்கிள்:

ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட் புக், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, சீருடைகள் போன்ற பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுமே அரசின் எந்த நல திட்டமும் மாணவர்களுக்கு சென்றடையவில்லை. கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தக் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்ப உள்ளது.

அதிலும், ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கிட்டத்தட்ட 6,18,101 சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. சைக்கிளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சைக்கிள்களை பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


சைக்கிள்களை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுவது போல ஐஐடி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share:

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - FILLED FORMAT - PRINTED COPY & EMPTY FORMAT

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - FILLED FORMAT - PRINTED COPY & EMPTY FORMAT

  • Ennum Eluthum-பாடக்குறிப்புப் படிவம் - Download Here

Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-06-2022 Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-06-2022 Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-06-2022 Morning Prayer Activities

 திருக்குறள் :

திருக்குறள் :

பால் : பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம் :மானம் 

குறள் - 970 

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. 

பொருள் - தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

பழமொழி :

Bare words buy no barely.

வெறும் கையால் முழம் போட முடியுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்

பொது அறிவு :

1. கரையான் நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டைகள் இடும்? 

30,000 

2. கப்பல் மிதக்கும் தத்துவம் என்ன? 

ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

English words & meanings :

liability - the state of being responsible, noun. ஒன்றுக்குப் பொறுப்பேற்கும் தன்மை. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

NMMS Q 13 : 

மஞ்சு 29.2.1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாட்களை கொண்டாடியிருப்பார்? 

விடை : 9

நீதிக்கதை

அன்னையின் வ பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 

ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.

இன்றைய செய்திகள்

29.06.22

* நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

* இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,073 ஆக பதிவாகியுள்ளது.

* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடபிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

* விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்  2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

* அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 208 கி. மீ வேகத்தில் பந்து வீசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

* The Federal Ministry of Environment has announced a nationwide ban on the use of disposable plastic products from July.

 * India's daily covid - 19 cases are increasing by 45 percent in a single day.  The number of daily govt casualties in the country is reported to be 17,073.

 * Vice-Chancellor of the University of Tamil Nadu. Ms. Geethalakshmi said that one can apply for the undergraduate courses at the Tamil Nadu Agricultural University, Coimbatore from today till the 27th of next month.

 * Anna University has introduced 40 new optional courses for engineering students.  Interested students can now take the desired subjects as their preferred subjects.

 * Ian Morgan, England's action batsman and World Cup-winning captain for England has announced his retirement from international cricket.

 * Current champion Novak Djokovic advanced to the second round at the Wimbledon Tennis Men's Singles.

 * India's Bhuvneshwar Kumar 280k in the T20I match against Ireland.  He set a new world record by throwing the ball at a speed of 208 k.m.



 Prepared by


Covai women ICT_போதிமரம்

,
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support