10th Tamil Guide Unit 2.4 இயல் 2.4 புயலிலே ஒரு தோணி

10th Tamil Guide Unit 2.4
இயல் 2.4 புயலிலே ஒரு தோணி

1 . ‘  புயலிலே  ஒரு தோணி ‘  கதையில் இடம்பெற்றுள்ள  வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும்  புயலில் ,  தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

 வர்ணனைகள் :

1.  கொளுத்திக் கொண்டிருந்த வெயில்   இமைநேரத்தில் மறைந்து விட்டது ;  புழுங்கிற்று .

2.  மேகப்  பொதிகள் பரந்து திரண்டொன்றிக்  கும்மிருட்டாய்  இறுகி  நின்றன .

3.  கிடுகிடுக்கும்  இடி முழக்கத்துடன்   மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன .

4.  வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது .

5 . சூறாவளி மாரியும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக்  கெக்கலித்தன .

6.  வானும் கடலும் வளியும் மழையும்  மீண்டும் ஒன்று

கூடிக் கொந்தளிக்கின்றன .

7 .  வானம் பிளந்து தீ  கக்கியது .

8 .மழை வெள்ளம் கொட்டுகிறது . 

9.வளி முட்டி புரட்டுகிறது .

10 .கடல்வெறிக் கூத்தாடுகிறது .

அடுக்குத் தொடர்கள் :

1 .தொங்கான்  எலும்புகள் முடிவது போல்  நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன்  தத்தளித்தது .

2. இருளிருட்டு , இருட்டிருட்டு ,  கும்மிருட்டு ,  குருட்டிருட்டு தலைக்கு மேல் காணப்பட்டது .

3 . தொங்கான் நடுநடுங்கித்  தாவித் தாவிக்  குதித்து குதித்து விழுவிழுந்து   நொறு நொறு நொறுங்குகிறது .

4 . சூரியன் சூரியன்….கரை ! கரை ! …

5 .  கடல் அலைகள் மொத்து மொத்தென்று மோதின .

ஒலிக்குறிப்புச் சொற்கள் :

1 . தொங்கான்  நடுநடுங்கித்  தாவித் தாவிக்   குதிகுதித்து நொறு நொறு நொறுங்கல்  ஒலியுடன்   நொறுங்குகிறது .

2. ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்  ஙொய்ங் புய்ங் .

3.  இடிமுழக்கச்  சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன .

புயலுக்குப் பின் அமைதி…கரை :

    மறுநாள் காலையில்  சூரியன் உதித்து ,  தொங்கான் மிதந்து சென்று ,  அலைகளில் நெளிந்தோடி  ஒருவழியாகக்   கரையை அடைந்தது .

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...