10th Tamil Guide Unit 2.1
இயல் 2.2 காற்றே வா!
I. சொல்லும் பொருளும்
- மயலுறுத்து – மயங்கச்செய்
- ப்ராண – ரஸம் – உயிர்வளி
- லயத்துடன் – சீராக
I. பலவுள் தெரிக
1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
உருவகம், எதுகை
மோனை, எதுகை
முரண், இயைபு
உவமை, எதுகை
விடை : மோனை, எதுகை
II. குறு வினா
வசன கவிதை – குறிப்பு வரைக
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்
தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்
சான்று
இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது – பாரதியார்
காற்றே வா! – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பாரதியார் ___________ அறியப்பட்டவர்
விடை : எட்டயபுர ஏந்தலாக
2. பாரதியார் ___________ எனப் பாராட்டப்பட்டவர்.
விடை : பாட்டுக்காெரு புலவன்
3. _________, ___________ முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர் பாரதியார்.
விடை : இந்தியா, சுதேசமித்திரன்
II. குறு வினா
1. இயற்கை வாழ்வு எவற்றோடு இயைந்தது?
காடு, மலை, அருவி, கதிரவரன் இவற்றோடு இயைந்ததே இயற்கை வாழ்வு.
2. இயற்கையை பற்றி கவிஞர் பாடியள்ள பாடல்கள் யாவை?
நீரின்றி அமையாது உலகு
காற்றின்றி அமையாது உலகு
3. பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப் பெற்றவர்?
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
சிந்துக்குத் தந்தை
பாட்டுக்காெரு புலவன்
மகாகவி
கலைமகள்….. என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர் ஆவார்
4. பாரதியாரின் சிறப்புகள் யாவை?
- கவிஞர்
- கட்டுரையாளர்
- சிறுகதையாளர்
- ஆசிரியர்
- இதழாசிரியர்
- கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
5. பாரதியார் உலகிற்கு தந்த படைப்புகள் எவை?
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாப்பா பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திச்சூடி
6. பாரதியார் ஆசியரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்கள் யாவை?
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயர்கள் இந்தியா, சுதேசிமித்திரன் ஆகும்
7. வசன கவிதை என்றால் என்ன?
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும்
8. புதுக்கவிதை உருவாக காரணம் யாது?
உணர்ச்சி பாெங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டு உள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
9. காற்றிடம் எதனைக் கொண்டுவந்து கொடுக்குமாறு பாரியார் வேண்டுகிறார்?
மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன், இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து மிகுந்த உயிர் வளியைக் கொண்டு வந்து கொடுக்குமாறு காற்றிடம் பாரதியார் வேண்டுகிறார்.
10. எப்படி வீசுமாறு காற்றைப் பாரதியார் பணிக்கிறார்?
காற்றை மெதுவாக, நல்ல முறையில் சீராக, நீண்ட காலம் நின்று வீசிக் கொண்டிருக்குமாறு பாரதியார் பணிக்கிறார்.
III. சிறு வினா
1. “காற்றே வா” பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது?
- மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா
- இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா
- உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத
- நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
- உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்
- உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
- உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்
- உன்னை வழிபடுகின்றோம்”
2. பாரதியார் குறிப்பு வரைக
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்காெரு புலவன் என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்
- கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், ஆசிரியர், இதழாசிரியர் கேலிச்சித்திரம் – கருத்துப்படங்களை உருவாக்கியவர்
- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகியன உலகிற்கு தந்த படைப்புகள்
- இந்தியா, சுதேசிமித்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்
பலவுள் தெரிக
1.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைக் கண்டுபிடி.
அ) மயலுறுத்து – மயங்கச்செய்
ஆ)ப்ராண – ரஸம் – உயிர்வளி
இ) லயத்துடன் – சீராக
ஈ) வாசனை மனம்
Answer:
ஈ) வாசனை – மனம்
2.பொருத்திக் காட்டுக.
i) பாஞ்சாலி சபதம் – 1. குழந்தைகளுக்கான நீதிப்பாடல்
ii) சுதேசமித்திரன் – 2. பாராட்டப்பெற்றவர்
iii) புதிய ஆத்திசூடி – 3. இதழ்
iv) சிந்துக்குத் தந்தை – 4. காவியம்
அ) 3, 4, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 1, 2
3.‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
4.‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
5.கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
6.பாட்டுக்கொரு புலவன் என்று பாராட்டப்பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
7.‘காற்று’ என்னும் தலைப்பில் வசன கவிதை எழுதியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
8.“காற்றே , வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா” – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
அ) பாரதியார்
9.ப்ராண-ரஸம் என்ற சொல் உணர்த்தும் பொருள்
அ) சீராக
ஆ) அழகு
இ) உயிர்வளி
ஈ) உடல்உயிர்
Answer:
இ) உயிர்வளி
10.வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வல்லிக்கண்ணன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்
11.‘காற்றே வா’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்
12.காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?
அ) கவிதையை
ஆ) மகரந்தத்தூளை
இ) விடுதலையை
ஈ) மழையை
Answer:
ஆ) மகரந்தத்தூளை
13.பொருத்திக் காட்டுக:
i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி
iii) லயத்துடன் – 3. மணம்
iv) வாசனை – 4. சீராக
அ) 1, 2, 4, 3
ஆ) 2, 3, 1, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 1, 2, 4, 3
14.ஆங்கிலத்தில் Prose Poetry (Free verse) என்றழைக்கப்படும் வடிவத்தைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
ஆ) பாரதியார்
15.புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம்
அ) பாரதியின் வசன கவிதை
ஆ) ஜப்பானியரின் ஹைக்கூ
இ) வீரமாமுனிவரின் உரைநடை
ஈ) கம்பரின் கவிநயம்
Answer:
அ) பாரதியின் வசன கவிதை
16.பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
அ) i, ii – சரி
ஆ) முதல் மூன்றும் சரி
இ) நான்கும் சரி
ஈ) i, ii – தவறு
Answer:
அ) i, ii – சரி
17.பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட என்ற இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) பாரதியார்
18.‘இனிய வாசனையுடன் வா’ என்று பாரதி அழைத்தது
அ) காற்று
ஆ) மேகம்
இ) குழந்தை
ஈ) அருவி
Answer:
அ) காற்று
19.பாரதியார் காற்றை ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்
அ) மணம் வீசும் காற்றாய் நீ வா
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
இ) மயிலாடும் காற்றாய் நீ வா
ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா
Answer:
ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு வா
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.