1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரைகள்!

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ , மாணவியர்களுக்கு மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

 பார்வை -1 ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும் , பார்வை -2 ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் . 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , மாவட்டங்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10 - ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28 - ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது . இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் , ஆசிரியர் , பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை , கற்றல்நிலை , உடல்நலம் , மனநலம் , கல்வி இணைச் செயல்பாடுகள் , கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் , கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் .

மேலும் , பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது .

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...