பாரதிதாசன் பல்கலை அரியர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு _ ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு!

 பாரதிதாசன் பல்கலை அரியர்  மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு _  ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன்

2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் சேர்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள 5 ஆண்டுகள் காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.

எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் 2018- 2019-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் அரியர் வைத்திருந்தால், கடைசி வாய்ப்பாக ஏப்ரல் இறுதியில் நடக்கவுள்ள தேர்வை எழுதிக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்.20-ம் தேதிக்குள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாக விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...